காசிக்கு ரொம்பத்தான் சேட்டை.. போலீஸ் பக்கத்தில் இருந்தும்.. அவர் கை காட்டிய சிக்னலை பாருங்களேன்!
நாகர்கோயில் காசியிடம் விசாரணை நடந்து வருகிறது
நாகர்கோவில்: ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய காசி போலீசாரின் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லையாம்.. இதனால் காசியிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது... அதேசமயம், நேற்று கோர்டில் ஆஜர்படுத்தும்போது, காசி காட்டிய ஹார்ட்டி சிம்பள் போட்டோ இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
Recommended Video
நாகர்கோயில் காசி சமாச்சாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. பல பெண்களை ஏமாற்றி வலையில் விழ வைத்த காசி பற்றின பல தகவல்களும் நமக்கு வந்தவண்ணமே உள்ளன. 26 வயதாகும் காசிக்கு இன்னொரு பெயர் சுஜி.
ஜிம் பாடி.. ரிச் லுக்.. காஸ்ட்லி லைப் என்றே வாழ்க்கை ஓடியுள்ளது.. காசியின் அப்பா கோழிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.. காசி ஜிம் பாடி.. ரிச் லுக்.. காஸ்ட்லி லைப் என்றே வாழ்க்கை ஓடியுள்ளது.. காசியின் அப்பா கோழிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.. காசி காலேஜ் படித்து முடித்ததும் கடையின் பொறுப்பு இவரிடம் தரப்பட்டுள்ளது.. சுகுனா சிக்கன் சென்டரின் குமரி மாவட்ட டீலர்தான் காசி.. வடசேரி மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக்கில் தான் படித்துள்ளார்... அப்போதே நிறைய பெண்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தெருவில் யாருடனும் பேச மாட்டாராம் காசி.. ஆனால் குமரி மாவட்ட போலீஸ் அதிகாரி மகள் ஒருவரையே ஏமாற்றி வீழ்த்தி உள்ளார்.. பள்ளி மாணவி முதல் பெண் டாக்டர், என்ஜினியர் என காசியின் பெண்கள் வட்டாரம் பெருகி கொண்டே வந்துள்ளது. பெண் டாக்டரிடம் தான் ஒரு பிசினஸ்மேன் என்று சொல்லிதான் அறிமுகமாகி உள்ளார். ஆனால் காசி அப்போது காலேஜ் படித்து கொண்டிருந்தாராம்.
பெரும்பாலும் பணக்கார வீட்டு பெண்கள்தான் காசியிடம் ஏமாந்துள்ளனர்.. சோஷியல் மீடியா ஒன்றில்கூட ஒரிஜினல் பெயர் இல்லை.. எல்லாமே போலி அக்கவுண்ட்கள்தான்.. அந்த கோழிப்பண்ணையில் மட்டும் 90 லேப்டாப்கள் இருந்துள்ளன.. அதற்குள் முழுசும் ஆபாசம்.. ஆபாசமாக நிரம்பி வழிகிறதாம்.
ஏகப்பட்ட சொத்துக்களை வளைத்து போட்டுள்ள காசிக்கு கந்துவட்டி கும்பலுடனும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.. 3 நாள் போலீஸ் காவல் விசாரணைக்கு கோர்ட்டில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. நேற்று போலீஸ் பாதுகாப்புடன் காசி கோர்ட்டில் இருந்த சமயம், செய்தியாளர்கள் அவரை போட்டோ பிடிக்க முயன்றனர்.. அப்போது காசி டக்கென 2 கைகளையும் குவித்து ஹார்ட்டின் சிம்பள் காட்டினார்.. இந்த போட்டோ வைரலாகி வருகிறது.
இன்றுதான் காசியின் முதல் நாள் விசாரணையும் ஆரம்பமானது... ஆனால் போலீசாருக்கு காசி சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இந்த 3 நாளுக்குள் காசியிடம் முக்கிய தகவல்களை நம் போலீசார் கறந்துவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.