20 மாணவிகள், 5 ஆசிரியைகள்... காமலீலைகள் செய்த நாகர்கோவில் கல்லூரி நிர்வாகி கைது.. 2 பெண்களும் கைது
Recommended Video
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ஆசிரியை மற்றும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக கல்லூரி நிர்வாகி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளத்தில் ஜேக்கப் என்னும் தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 80 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
ஆசிரியர்கள் உட்பட 10 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த கல்லூரியின் நிறுவனர் ரவி. இவர் இரண்டு பெண் ஊழியர்களின் துணையோடு ஆசிரியைகள் மற்றும் மாணவிகளை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
நாகர்கோவிலில் பரபரப்பு.. நடு ரோட்டில் வாலிபரை அடித்து இழுத்து செல்லும் கும்பல்.. வெளியான வீடியோ
ஏற்காவிட்டால் டார்ச்சர்
இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஒத்துப்போனால் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்ததாம். இல்லாவிட்டால் அலுவலக ரீதியாக டார்ச்சர் கொடுத்து வந்துள்ளதாகவும் கல்லூரி நிர்வாகி மீது புகார் கூறப்படுகிறது.
கண்காணிப்பு
இந்த கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் சின்ன கேமராக்கள் பொருத்தி அதன்மூலம் மாணவிகளை ரகசியமாக கல்லூரி நிர்வாகி ரவி கண்காணித்தாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த கல்லூரியில் வேலை பார்த்துவிட்டு பாலியல் பிரச்னை காரணமாக பல ஆசிரியைகள் வேலையை விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிரியை கதறல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவி தனது அறைக்கு ஒரு ஆசிரியையை அழைத்து, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாராம். ரவியின் அறையில் இருந்து கலங்கிய கண்களுடன் அந்த ஆசிரியை வெளியே வந்துள்ளதை கவனித்த மாணவிகள் ஏன் அழுகிறீர்கள் என அவரிடம் கேட்டுள்ளனர். மேலும் இதுபற்றி அந்த ஆசிரியரின் பெற்றோரிடமும் மாணவிகள் கூறியுள்ளனர்.
அம்பலமானது லீலை
இதையடுத்து ஆசிரியையின் பெற்றோர் விசாரித்ததில் ரவியின் காம லீலைகள் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அந்த ஆசிரியை பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆசிரியைகள், மாணவிகளை ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
கல்லூரி நிர்வாகி கைது
விசாரணையில் கல்லூரியில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகி ரவி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் ரவிக்கு உதவியதாக கல்லூரியின் இணை இயக்குனர்கள் நளினி, கலா ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
5 ஆசிரியைகள்
இந்த கல்லூரியில் 20 மாணவிகள் மற்றும் 5 ஆசிரியைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாகி ஆசிரியைகளின் உதவியுடன் மாணவிகள் மற்றும் சக ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட கல்லூரி நிர்வாகி ரவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பெண் நிர்வாகிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.