விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ.. ரூ. 50,000 செலவில் மாற்றுத் துணிகள்.. சபாஷ் ரோட்டரி!
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகளில் விபத்துகளில் சிக்கியவர்களை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வரும் போது, அவர்களுக்கு மாற்று துணிகள் அரசு தரப்பில் வழங்காத நிலையில் நாகர்கோவிலில் சுழற்சங்கம் (ரோட்டரி) சார்பாக 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆண் பெண்களுக்கு பீரோ மற்றும் மாற்று துணிகளை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்கள். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள் மற்றும் பல்வேறு விதங்களில் விபத்துகளில் சிக்கி சிகிற்சை பெருவதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அவசர சிகிற்சை பிரிவுக்கு கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றனர்.
அப்படி சேர்க்கப்படும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனே மாற்று துணி மணிகள் தேவைப்படுகிறது. ஆனால் அதனை மருத்துவமனை சார்பில் வழங்கப்படுவது இல்லை. இதனால் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வரும் நபர்கள் மாற்று துணி இல்லமால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொண்டு வரப்படும் போது அவர்களின் உறவினர்கள் உடன் இருக்க வாய்ப்பு இல்லை. அந்த நேரத்தில் ரத்தம் கசிந்து உள்ள துணிகளை மாற்றி விட்டு உடனடியாக சிகிச்சை அளிக்க மாற்று துணி தேவைப்படுகிறது.
அதனை அரசு மருத்துவமனை செய்து கொடுக்க முன் வராத நிலையில் நாகர்கோவிலில் சுழற்சங்கம் சார்பாக 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பீரோ மற்றும் ஆண் பெண்களுக்கு மாற்று துணிகளை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்கள். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து உள்ளது.