வீடியோ கால் பேசும்போது.. நிர்வாணமாக படம் பிடித்த காசி.. லேப்டாப்பில் நிரம்பி வழியும் ஆபாசம்.. ஷாக்!
நாகர்கோயில் காசியிடம் 3வது நாள் விசாரணை நடந்து வருகிறது
நாகர்கோவில்: வீடியோ கால் பேசும்போது, பெண்களின் நிர்வாண போட்டோக்களை, வீடியோக்களை காசி எடுத்து வைத்து லேப்டாப்பில் பத்திரமாக வைத்திருந்து இருக்கிறார்.. காசியிடம் ஏமாந்த பெண்கள் தொடர்பான லிஸ்ட்கள் தயாராகி வருகிறது.. அந்த லேப்டாப்பில் உள்ள வீடியோக்கள், போட்டோக்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். மாவட்ட வாரியாக, பிறகு மாநில வாரியாக என்ற அடிப்படையில் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால், காசியின் பின்னணியில் உள்ள விஐபிக்கள் வெட்ட வெளிச்சத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது!
Recommended Video
நாகர்கோயில் காசி விவகாரம் வேற லெவலுக்கு போகும் என்றே தெரிகிறது.. சுகுனா சிக்கன் குமரி மாவட்ட டீலர்தான் காசி.. ஏகப்பட்ட பெண்களை மயக்கி, ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி வந்துள்ளவர்.. பெண்களிடம் பறித்த பணத்தை வைத்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.
பெண் டாக்டர், பெண் என்ஜினியர், நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள், தொழிலதிபர்களின் மகள்கள் என இவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் லிஸ்ட் நீள்கிறது.. ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்தே காசி இப்படித்தானாம்!!
எதையெல்லாமோ காட்டி எங்களை சீரழித்தான்.. மோசம் போன பெண்கள் கதறல்.. கொஞ்சம் கூட பதறாத காசி!
பெண் டாக்டர்
இந்த விஷயத்தை முதன்முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததே சென்னையை சேர்ந்த அந்த பெண் டாக்டர்தான்.. பொள்ளாச்சி சம்பவம் நடந்தபோது, இந்த பெண் டாக்டர் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளார்.. பெண்கள் இப்படி பலாத்காரம் செய்யப்படுவதை கண்டித்தும், மனம் புழுங்கியும் ஒரு வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. இதை பார்த்துவிட்டுதான் காசி டாக்டரிடம் நெருங்கி பேசி பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.
நெருக்கம்
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டுள்ளனர்.. நெருக்கமாகவும் இருந்துள்ளனர்.. வீட்டில் சொந்தக்காரருக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லியே கொஞ்சம் கொஞ்சமாக டாக்டரிடம் பணம் பறிக்க ஆரம்பித்தார். கல்யாணம் செய்து கொள்ளதானே போகிறோம் என்று நம்பியே பெண் டாக்டர் பணம் தந்து கொண்டிருந்தார். இவர் மட்டும் இதுவரை ரூ.6.60 லட்சம் பணம் தந்துள்ளார்.
அதிர்ச்சி
ஒரு முறை 2 பேரும் நேரில் சந்தித்து கொண்டபோது காசியின் செல்போனை பெண் டாக்டர் எடுத்து பார்த்துள்ளார். அப்போதுதான் காசி பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் போட்டோக்களும் இருப்பதை கண்டு அதிர்ந்தார். கடுமையான உளைச்சலுக்கு ஆளானார்.. அப்போதுதான் இதை பற்றி கேட்கவும் மிரட்டலும் பணம் பறிக்க ஆரம்பித்தார்.. 6 லட்சம் ரூபாய் வரை காசிக்கு தந்த பெண் டாக்டர் ஒரு கட்டத்தில் தொல்லை பொறுக்க முடியாமல்தான் போலீசுக்கு வந்துள்ளார்.. காசி சிக்கியது இப்படிதான்!!
புற்றுநோய்
இதற்கு பிறகு வேறு ஒரு பெண் ஆன்லைன் புகாரில், தன் அம்மாவுக்கு புற்றுநோய், அதனால் பணம் வேண்டும் என்று கெஞ்சி கேட்டு பணம் வாங்கியிருக்கிறார்.. இன்னொரு காலேஜ் பெண்ணிடமும் இதேபோல் ஆபாச வீடியோவை காட்டி பணத்தை கேட்டு மிரட்ட, பயந்து போன அந்த பெண், வீட்டில் உள்ள பீரோவை திறந்து நகை எடுத்துள்ளார்.. அப்போது வீட்டில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டபிறகுதான் காசி விஷயத்தை சொல்லவும் அவர்கள் நடுங்கிவிட்டனர். விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்து அவர்களும் அமைதியாக விட்டுள்ளனர். இப்படி காசியால் ஏமாற்றப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கண்ணீர் கதையை சொல்ல தொடங்கி உள்ளனராம்.
கரிசனம்
காசிக்கு ஆயுதமே அன்பாக பேசுவதுதானாம்.. எந்த பெண்ணாக இருந்தாலும் அன்பு, கரிசனம், அக்கறை உள்ளவர் போலவே பேச்சை தொடங்கி தொடர்வதுதான் பழக்கமே.. பிறகு காசியை நம்பி செல்போன் நம்பர்களை தர ஆரம்பிப்பார்கள்.. பிறகு வாட்ஸ்அப் சேட்டிங், வீடியோ கால் என உடல்ரீதியான நெருக்கம் வரை கொண்டு செல்வார்.. வீடியோ சாட் செய்யும்போது, நிர்வாண போட்டோக்களை ஸ்கிரீன் ஷாட்கள் எடுத்து அதனை தன்னுடைய செல்போனில் பத்திரமாக வைத்துள்ளார் காசி.. பெரும்பாலும் பணம் பறிக்க காசி சொல்லும் காரணம், அம்மாவுக்கு கேன்சர் என்பதுதான்!!
தகவல்கள்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் காசி பற்றி வெளியே வந்தாலும், அதன் உண்மை தன்மையை நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் கண்டறிய முயன்றுள்ளனர். நேற்று காசியிடம் 2-வது நாள் விசாரணை நடந்தது... இந்த விசாரணை எஸ்பி ஸ்ரீநாத்தின் நேரடி பார்வையில் நடைபெற்று வருகிறது.. காசியிடம் இருந்து பெறப்பட்டு வரும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது. காசியிடம் ஏமாந்த பெண்கள் தொடர்பான லிஸ்ட்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
விவரங்கள்
அந்த லேப்டாப்பில் உள்ள வீடியோக்கள், போட்டோக்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்... மாவட்ட வாரியாக, பிறகு மாநில வாரியாக என்ற அடிப்படையில் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. காசிக்கு பின்னணியில் ஒரு பெரிய கும்பலே இருக்கும் என்பதால் இந்த 3 நாள் விசாரணைக்கு பிறகுதான் அவர்கள் யார் யார் என்ற விவரம் தெரியவரும்!!