குமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை, சந்தேகத்தின் அடிப்படையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 நபர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
இதுவரை குமரிமாவட்டத்தில் 4482 நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா மாநிலம் இருந்து வரும் நிலையில் அதனை ஒட்டி அமைந்து உள்ள மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று தெரிகிறது.
மும்பையிலிருந்து வந்தவருக்கு கொரோனா? பூந்தமல்லி அபார்மென்ட்டில் பரபரப்பு.. அனைவரும் கண்காணிப்பு
இதனிடையே மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை, சந்தேகத்தின் அடிப்படையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 நபர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை குமரிமாவட்டத்தில் 4482 நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.