நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிகிச்சைக்கு வரும் ஆண்களை மடக்கி உல்லாசம்.. தமிழகத்தில் இப்படியும் ஒரு நர்ஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சிகிச்சைக்கு வந்த ஆண்களுடன் உல்லாசம் அனுபவித்த நர்ஸ்- வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நர்ஸ் ஒருவர், சிகிச்சைக்கு வரும் வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகேயுள்ள கிராமத்தை சேரந்தவர் எஸ்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் திருவட்டாரிலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    இந்த ஊரின் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் விபத்தில் சிக்கி ஓராண்டுக்கு முன்பாக இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

    நோயாளியுடன் காதல்

    நோயாளியுடன் காதல்

    அப்போது ஜான்சனுக்கும், எஸ்தருக்கும் காதல் மலர்ந்துள்ளது. வீட்டு முகவரி, செல்போன் எண் போன்றவற்றை இருவரும் பரிமாறிக்கொண்டுள்ளனர். டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய பிறகும், ஜான்சன், எஸ்தருடன் போனில் காதல் வளர்த்துள்ளார். இதனால் இருவரும் தனியாக வெளியே சுற்றத்தொடங்கினர். அப்போது உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

    காதல் கட்

    காதல் கட்

    ஜான்சனின் வீட்டுக்கூட எஸ்தர் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் திடீரென என்ன ஆனதோ தெரியவில்லை, ஜான்சனிடம் பழகுவதை எஸ்தர் நிறுத்திக் கொண்டார். இதைத் தொடர்ந்து தனது வேலையையும் விட்டுவிட்டார். அதன் பிறகு ஜான்சன் போனில் அழைத்தாலும் செல்போனை எடுப்பது இல்லை.

    வாலிபருடன் நர்ஸ் உல்லாசம்

    வாலிபருடன் நர்ஸ் உல்லாசம்

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜான்சன் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஏராளமான புகைப்படங்கள் வந்தன. அந்த படங்கள் அனைத்தும் எஸ்தர் ஒரு ஆணுடன் தனி அறையில் இருக்கும் காட்சிகளாக இருந்தன. அதில் சில படங்களில் எஸ்தர் தாலியும் அணிந்து இருந்தார். இன்னொரு படத்தில் ஆண் ஒருவரின் சட்டையை அணிந்து இருந்தார். இன்னும் சில படங்களில் வாலிபர் ஒருவர் சட்டை அணியாமல் எஸ்தரை இறுக கட்டி அணைத்தபடி நின்றுள்ளார். மற்றொரு படத்தில் தாலியை கட்டிலில் கழற்றி வைத்து அருகில் நின்றுள்ளார்கள். பல படங்கள் கிளுகிளுப்பாக இருந்தன.

    காதலனை கழற்றிவிட்ட நர்ஸ்

    காதலனை கழற்றிவிட்ட நர்ஸ்

    நான் இவரை திருமணம் செய்துகொண்டேன். ஆகவே இனி என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று எஸ்தர் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். இதை கேட்டு ஜான்சன் அதிர்ச்சி அடைந்தார். உடனே எஸ்தரை தொடர்பு கொண்ட ஜான்சன் இதே போல் நாம் இருவரும் சேர்ந்து எடுத்த பல புகைப்படங்கள் என்னிடமும் உள்ளன என்று மிரட்டியுள்ளார். இதனால் தனது 2வது காதலனுடன் சேர்ந்து திருவட்டார் காவல் நிலையத்தில் ஜான்சனுக்கு எதிராக புகார் அளித்தார்.

    நர்ஸ் காதல் கதை

    நர்ஸ் காதல் கதை

    பெண் விவகாரம் என்பதால் திருவட்டார் போலீசார் இதை வேறு வகையில் விசாரித்துள்ளனர். அப்போது, எஸ்தரிடம் இரண்டாவது காதலனாக சிக்கியவர் பெயர் செல்வகுமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதும் அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது. சிகிச்சைக்கு வந்தபோதுதான், செல்வகுமாரையும், எஸ்தர் மடக்கி உல்லாசம் அனுபவித்துள்ளார். இருப்பினும், ஜான்சனுடன் செல்ல எஸ்தர் தயாராக இல்லை என்பதால் போலீசார் ஜான்சனை விலகிக்கொள்ளுமாறு அறிவுறுத்தி, அவரிடமிருந்த அந்தரங்கள் போட்டோக்களை டெலிட் செய்து அனுப்பி வைத்தனர். காதலி இன்னொருவருடன் உல்லாசமாக இருப்பதை அறிந்த ஜான்சன் புலம்பி திரிகிறாராம்.

    English summary
    A female nurse use to make love with his male patient caught on video in Kanyakumari district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X