குமரியில் களை கட்டியது ஓணம் கொண்டாட்டம்.. எங்கெங்கும் திருவாதிரை நடனங்கள்
Recommended Video
நாகர்கோவில்: மலையாள மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஒண பண்டிகை களைகட்டி வருகிறது.
நாகர்கோவில் உள்ள பள்ளிகூடத்தில் மாணவியர்கள் விதம் விதமான அத்தபூ கோலங்கள் போட்டும், திருவாதிரை நடனங்கள் ஆடியும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் கூறி ஒண பண்டிகையை கோலகலமாக கொண்டாடினார்கள்.
கேரளா மக்களின் வசந்த விழா என்று அழைக்கபடும் ஒண பண்டிகை மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கோலாகலமாக கொண்டாட பட்டு வருகிறது.
வீடுகளில் அத்தபூ கோலங்கள் போட்டு கொண்டாட்படுவதை போல பள்ளிகள், கல்லூரிகளிலும் மாணவியர்கள் ஆசிரியர்கள் இனைந்து அத்தபூ கோல போட்டிகள் நடத்தி கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஒன்றில் இன்று நடைபெற்ற ஒண விழாவில் மாணவியர்கள் ஒண பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடபடுவதை போன்று பத்து குழுக்களாக பிரிந்து அத்தபூ கோல போட்டிகளில் பங்கேற்றனர்.
பண்டைய காலத்தில் மலையாள நாட்டை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி திருவோண பண்டிகை காலங்களில் நாட்டு மக்களை காண வருவதாக ஐதீகம். அந்த ஐதீகத்தின் அடிப்படையில் மாணவியர்கள் வித விதமான பூக்கலாள் வித விதமான அத்தபூ கோலங்கள் போட்டும், திருவாதிரை நடனங்கள் ஆடியும்
ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் கூறி ஒண பண்டிகையை கோலகலமாக கொண்டாடினார்கள்.