லேப்டாப், செல்போன்களில் 800-க்கும் மேல் ஆபாச வீடியோக்கள்.. போலீஸாரையே உறைய வைத்த காசி!
நாகர்கோவில்: நாகர்கோவில் காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சிபிசிஐடி போலீஸார் மீட்டெடுத்துள்ளனர்.
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி (27). இவர் பெண்களுடன் நெருங்கி பழகியதோடு ஆபாச புகைப்படம் எடுத்து அதை அந்த பெண்களிடம் காட்டி பணம் பறித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் புகார் கொடுத்ததன் பேரில் காசி மீது 5 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆபாச போட்டோக்களை வைத்து விஜயதசமி பூஜை.. அடங்காத 'முரட்டுகுத்து’ டைரக்டர்..!
லேப்டாப்
5 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சிபிசிஐடி போலீஸார் மீட்டெடுத்துள்ளனர். இவற்றை பகிர்ந்து கொண்ட காசியின் நண்பர்கள் விரைவில் சிக்குவார்கள் என தெரிகிறது.
புகார்
இதனிடையே 5 நாட்கள் காவல் முடிந்து காசியை நீதிமன்றத்தில் இன்று சிபிசிஐடி போலீஸார் ஒப்படைக்கின்றனர். 20 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். புகார் தெரிவிக்கும் பெண்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
மாணவி
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். அந்த மாணவியை பார்க்க சென்னை வந்த அவர், காதலிப்பதாக கூறியுள்ளார். பின்னர் அந்த மாணவியை கன்னியாகுமரிக்கு வரவழைத்து காரிலேயே உல்லாசம் அனுபவித்து அதை வீடியோவாக எடுத்துள்ளார்.
விசாரணை
அந்த மாணவியை அவ்வப்போது பணம் கேட்டு மிரட்டியதால் ஒரு கட்டத்தில் மாணவி, காசி மீது புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. லேப்டாப் மற்றும் செல்போன்களில் அழிக்கப்பட்ட வீடியோக்களை கண்டு போலீஸாரே அதிர்ச்சி அடைந்தனர்.