கன்னியாகுமரியில் 87 % சூரிய கிரகணம்!
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில். சிறப்பு சூரிய கண்ணாடி மூலம் சூரிய கிரகணத்தை கண்டு மகிழ்ந்தனர் சுற்றுலா பயணிகள்.
எந்த வித பயமும் இன்றி அச்சமின்றி சுற்றுலாப் பயணிகள் இந்த பகுதி சூரிய கிரகணத்தை கண்டு களித்தனர். கன்னியாகுமரியில் சுமார் 87 % சூரிய கிரகணம் பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.
சூரிய கிரகணம் இன்று இந்தியா முழுவதும் காலை காலை 8.06 மணிக்கு தொடங்கி 11.19 மணிக்கு நிறைவு பெரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி குறிப்பிட்ட நேரத்தில் சூரிய கிரகணம் என்ற அறிய நிகழ்வு நடைபெற்றது.
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் வழக்கமாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிமாக இருந்தது. வந்த சுற்றுலா பயனிகள் அனைவரும் சூரிய கிரகணத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
அபூர்வ சூரிய கிரகணம்.. வித்தியாசமாக காட்சியளித்த மரத்தின் நிழல்.. கடலூரில் செம!
அவர்கள் சூரிய கிரகணத்தை பார்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பரத்தியேக கண்ணாடிகள் வழங்கினார்கள். அதன் மூலம் கண்டு களித்தனர், எந்த வித பயமும் இன்றி அச்சமின்றி கண்டு களித்தனர். கன்னியாகுமரியில் சுமார் 87 % சூரிய கிரகணம் பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கதின் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.