ஏங்க இப்படி குடிக்கறீங்க.. மனம் நொந்த மனைவி.. 2 குழந்தைகளுக்கு விஷம் தந்து.. உயிரை விட்ட பரிதாபம்!
தற்கொலை செய்த இளம்பெண் பரிதாபமாக பலியானார்
கன்னியாகுமரி: "ஏங்க இப்படி குடிக்கிறீங்க.. வீட்டு செலவுக்கு என்ன செய்றது? எப்படி சாப்பிடறது?" என்று கேட்ட மனைவி குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தம்பதி பிரவின்ராஜ் - மினி. பிரவீன்ராஜ் ஒரு கூலி தொழிலாளி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
மினிக்கு 27 வயதாகிறது.. பிரவின்ராஜ் கொஞ்ச காலமாகவே வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார். தினமும் கிடைக்கும் பணத்தை வைத்து தண்ணி அடித்து வந்துள்ளார். இதனால் குடும்பம் நடத்த முடியாமல், குழந்தைகளுக்கு சாப்பாடு போட முடியாமல் மினி தவித்துள்ளார்.
பிரவின்ராஜிடம் இதை பற்றி பலமுறை கேட்டும், காதில் வாங்கி கொள்ளவில்லை என தெரிகிறது. அதனால் தினந்தோறும் இவர்களுக்குள் சண்டை வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 20-ம் தேதியும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது.. பிறகு, பிரவீன்ராஜ் வெளியே சென்றுவிடவும், வீட்டில் இருந்த மினி குழந்தைகளுக்கு விஷத்தை தந்து, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஜோலியின் குலை நடுங்கும் கொலைகள்... வளர்ப்பு நாய்க்கு சயனைடு கொடுத்து.. ஒத்திகை பார்த்த கொடூரம்
ரொம்ப நேரமாக மினி வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர்.. அபபோதுதான், மினியும், 2 குழந்தைகளும் மயங்கி கீழே விழுந்துகிடப்பதை கண்டு அதிர்ந்து, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் இருந்த மினி இன்று காலை இறந்துவிட்டார். 2 குழந்தைகளும் இப்போதும் தீவிர சிகிச்சையில் உள்ளன.. இதுகுறித்து வடசேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.