இரு ஆண் நண்பர்களின் கசமுசா உறவு.. ஒருவருக்கு திருமணம்.. மனம் உடைந்த இன்னொருவர் தற்கொலை
ஓரின சேர்க்கை விவகாரத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. ஓரினச் சேர்க்கை நண்பர்கள் இருவரில் ஒருவருக்குத் திருமணம் ஆனதால் மனம் உடைந்த இன்னொரு நண்பர் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் சூரப்பள்ளம் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மகேஷ் ஒரு டிப்ளமோ என்ஜீனியர். அவருடைய நெருங்கிய நண்பர்தான் மணிகண்டன். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள்.. கூடவே.. படுக்கையையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இருவருக்கும் ஓசூரில் நல்ல வேலையும் கிடைத்தது. ஆனால் அதை விட்டு விட்டு ஊர் திரும்பினர். ஒருவர் கொத்தனார் வேலை பார்க்க இன்னொருவர் எலக்ட்ரீஷியன் ஆனார். இருவருக்கும் இடையிலான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. பிரிக்க முடியாத உறவாக அது மலர்ந்தது.
நேரில் பார்க்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எப்போது பார்த்தாலும் போனில் பேசிக் கொண்டிருப்பார்கள். வாட்ஸ் ஆப்பில் பேசுவார்கள். இருவரின் நெருக்கமும் கணவன் மனைவியின் நெருக்கமாக மாறியது இந்த நிலையில் மகேஷுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. பெண்ணையும் பேசி முடித்தே விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்தார் மணிகண்டன்.
என்னை விட்டுப் போக முடிவு பண்ணிட்டியா என்று மகேஷுடன் சண்டை பிடித்துள்ளார். ஆனால் மகேஷ் கேட்கவில்லை போல. அத்தோடு மணிகண்டனுடன் பேசுவதையும் குறைத்து விட்டார். இதனால் மனம் உடைந்து போனார் மணிகண்டன். தான் உயிருக்கு உயிராக பழகிய மகேஷ் தன்னை ஒதுக்கியதை தாங்க முடியாத அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் ராஜாக்கமங்கலம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டனின் செல்போனில், மகேஷுடன் அவர் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.