நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ 10 ஆயிரம் கடன்.. மனைவியை அசிங்கமாக பேசிய கந்து வட்டிக்காரர்கள்.. மனஉளைச்சலால் மாண்ட தொழிலாளி

Google Oneindia Tamil News

நாமக்கல்: வெறும் ரூ 10 ஆயிரம் கந்து வட்டி கடனுக்காக வீட்டு வாசலில் நின்று மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த விசை தறித் தொழிலாளி குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதில் அவரும் மனைவியும் இறந்த நிலையில் இரு குழந்தைகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Recommended Video

    ஏற்காட்டில் புதிய அசைவ ஹோட்டல்.. டூவீலர் மாடல் சீட்.. டேபிள்களில் கேம்கள் - வீடியோ

    திருச்செங்கோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (40). தறித்தொழிலாளியான இவரது மனைவி மேனகா (38). இவர்களுக்கு பூஜா (14), நவீன் ஆகிய குழந்தைகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் கந்து வட்டி கும்பலிடம் ரூ 10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

    75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை அமெரிக்காவில் பறக்கவிட முடிவு.. அரசு எடுத்த ரிஸ்க்.. ஏன் இப்படி?75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை அமெரிக்காவில் பறக்கவிட முடிவு.. அரசு எடுத்த ரிஸ்க்.. ஏன் இப்படி?

    கொரோனா ஊரடங்கு

    கொரோனா ஊரடங்கு

    அதற்கு அவ்வப்போது வட்டி கட்டி வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் வட்டி கட்ட முடியாமல் தவித்தனர். இதனால் கந்து வட்டிக்காரர்கள் அசலையும் வட்டியையும் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசியதை சுப்பிரமணியனால் ஜீரணிக்க முடியவில்லை.

    டார்ச்சர்

    டார்ச்சர்

    இதனால் அவர் மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்தார். இதில் கணவனும் மனைவியும் பலியாகிவிட்டனர். இரு குழந்தைகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து அவரது பெண் பூஜா கூறுகையில் வேலை இல்லை என்பது தெரிந்தும் அம்மாவையும் அப்பாவையும் கடனை திருப்பிக் கேட்டு அய்யாசாமி, வைரவேல் ஆகிய இருவரும் டார்ச்சர் செய்தார்கள்.

    பணம் கேட்டு நச்சரிப்பு

    பணம் கேட்டு நச்சரிப்பு

    அம்மாகிட்ட ஒரு மாதிரியும் அப்பாகிட்ட ஒரு மாதிரியும் அய்யாசாமி பேசினார். போன் செய்தும் டார்ச்சர் செய்தனர். காலையில் எழுந்து பார்க்கும் போது அம்மாவும் அப்பாவும் இறந்து கிடந்தார்கள் என்றார் பூஜா. இதுகுறித்து மேனகாவின் தாய் கூறுகையில் இரவு 10 மணிக்கு என்னுடன் என் மகள் பேசினாள்.

    ஜாதி ஜனம்

    ஜாதி ஜனம்

    அப்போது ஏதாவது சொல்லியிருந்தால் நான் பணத்திற்கு ஏற்பாடு செய்திருப்பேனே. இரண்டு பேரும் அப்படியே தூங்கற மாதிரி இருக்காங்களே, இத்தனை ஜாதி, ஜனம் இருந்தும் என் பிள்ளைகளை நான் விட்டுவிட்டேனே என அவர் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    English summary
    Usury Interest people tortured and teases wife of Spinning worker who commits suicide in Namakkal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X