புள்ளைங்க மேலயும் ஏத்திட்டான்.. நாமக்கல்லை பதற வைத்த திடீர் விபத்து.. பதற வைக்கும் வீடியோ
2 பேர் பஸ் மோதி உயிரிழந்த வீடியோ காட்சி இப்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
நாமக்கல்: கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஒன்று, ரோடு ஓரத்தில் நடந்து போய்க்கிட்டு இருந்த 2 பேர் மீது தாறுமாறாக மோதியதில் அவர்கள் பஸ் டயர்களுக்கு அடியிலேயே உடல் நசுங்கி உயிரிழந்துவிட்டனர். இந்த சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
நாமக்கல் திருச்செங்கோட்டில் இருந்து வந்த அரசு பஸ் ஒன்று நாமக்கல் மலைசுற்று பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி சவுக்கு மரம் ஏற்றிக்கொண்டு முன்னே சென்று கொண்டிருந்தது.
அங்கே இருந்த பெட்ரோல் ஒன்றிற்கு செல்ல பஸ் டிரைவர் முயன்றார். அதனால் முன்னால் போன லாரி
மோதாமல் இருக்க பஸ்ஸை டிரைவர் வேறு பக்கமாக திருப்பினார்.
டயர்கள் அடியில் சிக்கினர்
ஆனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடியது. பிறகு சாலையை விட்டு ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீதும் வேகமாக மோதி தாண்டியது. இதில் அவர்கள் இருவருமே அங்கேயே பஸ் டயர்களுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
பள்ளி குழந்தைகள்
அது பட்டப்பகல் மற்றும் பிஸியான ரோடு என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. ஸ்கூல் முடிந்து பிள்ளைகளும் அங்கே நடந்து வந்து கொண்டிருந்தனர்.
சிசிடிவி காட்சி
2 பேர் மீது மட்டுமல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்த பிள்ளைகள் மீதும் மோதியதாக தெரிகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இதனால் அங்கே பெருத்த பரபரப்பு ஏற்பட்டது.
பதட்டத்துடன் பெண்
"அவங்க பாட்டுக்கு போய்ட்டு இருந்தாங்க.. எப்படி ஒரு செகண்ட்ல இப்படி ஆயிடுச்சே, அந்த புள்ளைங்க மேலயும் ஏத்திட்டான்... புள்ளைங்க மேலயும் ஏத்திட்டான்" என்று ஒரு பெண் பதட்டத்துடன் அந்த வீடியோவில் பதறி பேசுகிறார்.