நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலியான பரிதாபம்!
நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்: நாமக்கலில் மருத்துவமனையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. மிகவும் மோசமான வெயில் அடித்து வந்த நிலையில் மக்களை குளிர்விக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் கனமழை பெய்தது. இதனால் மழை காரணமாக அங்கு இருக்கும் பிரபல தங்கம் மருத்துவமனையின் கேன்டீன் சுவர் இடிந்து விழுந்தது. இந்த கனமழை பெய்த நிலையில் திடீரென சுவர் சரிந்து அங்கு அமர்ந்து மக்கள் மீது இடிந்து விழுந்தது.
நாளை அவசரமாக கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்.. பயங்கரவாத தடுப்புச் சட்டம் தாக்கலாகிறது!
இதில் கேன்டீனில் உள்ளே இருந்து கலா என்ற ஒரு மருத்துவர் உட்பட இருவர் பலியானார்கள். இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது . இதில் காயம் அடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள்.