நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாடு மேய்க்க போன தீபா.. நிர்வாண நிலையில் சடலம்.. வாயில் துணி.. 2 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி!

25 வயது பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

நாமக்கல்: மாடு மேய்க்க போன தீபா, நிர்வாண நிலையில்.. சடலமாக கிடந்தது எப்படி என தெரியவில்லை.. வாயில் துணியை அடைத்து வைத்துள்ளனர்.. காட்டுக்குள் இருந்து தீபாவின் சடலத்தை மீட்டு நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இது சம்பந்தமாக ஒருவரை கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டலிநாடு ஊராட்சி கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன்.. இவரது மனைவி தீபா.. 25 வயதாகிறது.. 7 மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

25 year old woman dead body in the forest and mouth tied near namakkal

இவர்களுக்கு பிரதானமே விவசாயம்தான்.. நடேசன் விவசாயம் பார்த்து வருகையில், அவருக்கு உதவியாக தீபா ஆடு மாடுகளை மேய்க்க செல்வார்.

அப்படித்தான் சம்பவத்தன்றும், ஆடு, மாடுகளை மேய்த்துவிட்டு வருவதாக சொன்னார்.. அப்படியே துணிகளையும் துவைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, கீரைக்காடு காட்டுப்பகுதிக்கு சென்றிருக்கிறார்.. ஆனால் ரொம்ப நேரமாகியும் தீபா வீட்டுக்கு திரும்பவே இல்லை.

அதனால் பதறி போன நடேசன், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தேடினார்.. அங்கேயும் இல்லை.., அதனால் உறவினர்களும் சேர்ந்து தீபாவை தேடினர்.. இரவெல்லாம் தேடியும் கிடைக்காமல், விடிந்த பிறகுதான், கீரைக்காடு காட்டுப்பகுதியில் நிர்வாண நிலையில் தீபாவின் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது..

உடம்பெல்லாம் ரத்த காயங்கள் இருந்தன.. வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது.. மனைவியின் சடலத்தை கண்டு கதறி அழுதார் நடேசன்.. போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.. விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சத்துணவு திட்டம், இலவச கல்வி, தொழில் வளம், விவசாய புரட்சி...இவற்றின் தந்தை காமராஜர்!!சத்துணவு திட்டம், இலவச கல்வி, தொழில் வளம், விவசாய புரட்சி...இவற்றின் தந்தை காமராஜர்!!

தீபாவை யாராவது பலாத்காரம் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.. அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணி வைத்து திணித்து, அதன்பிறகு பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், அதன்பிறகு அடித்து கொன்றிருக்கலாம் என்றும் முதல்கட்டமாக கூறப்பட்டது.. ஆனால் எதுவாக இருந்தாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் தெரியும் என்று தெரிவித்த போலீசார் இது சம்பந்தமான விசாரணையையும் அதிரடியாக துவங்கினர்.

அப்போது, தீபாவின் உடம்பெல்லாம் கற்களால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்தன.. எப்படியும் காட்டு பகுதியில்தான் அவரை கொலை செய்திருக்க முடியும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.. சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போதுதான் அருண் என்பவர் சிக்கினார்.. 17 வயசுதானாம் இவருக்கு.. தீபாவை பலாத்காரம் செய்து, கல்லாலேயே அடித்து கொன்றுள்ளார்.. இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அருண் மைனர் என்பதால், சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைக்க வாழாவந்திநாடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

English summary
25 year old woman dead body in the forest and mouth tied near namakkal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X