வாக்குப் பெட்டியை சீல் வைக்கும் வரை கவனமாக இருங்கள்… அமைச்சர் தங்கமணி பேச்சு
நாமக்கல்: பெட்டியை சீல் வைக்கும் வரை பூத் ஏஜென்டாக செல்லும் அதிமுக மற்றும் கூட்டணியினர் கண்ணும் கருத்துமாக பணியாற்ற வேண்டும் என அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.
முருகன் போய் மயில் வேல் வந்தார்.. பெரியகுளம் அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்.. !
இதில் பங்கேற்ற மின்துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காளியப்பனை அறிமுகம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் வாக்குச்சாவடி ஊழியர்கள் அரசின் மீது கோபத்தில் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் கேட்டது நாம் தரவில்லை.
[உங்க தொகுதி எம்பி செயல்பாடு எப்படி? முழு விவரம் இங்கே]
ஆகவே, பூத் ஏஜென்டாக செல்லும் அதிமுக மற்றும் கூட்டணியினர் வெளியில் சென்றாலும் மற்றொருவரை அமர வைத்து விட்டு செல்ல வேண்டும். வாக்குப்பெட்டியை மூடி சீல் வைக்கும் வரை கண்ணும் கருத்துமாக பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.