நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராசிபுரத்தில் 4-ஆவதாக பிறந்த குழந்தை.. பெண் என்பதால் விற்றுவிடுமாறு கணவர், மாமனார் தொல்லை

Google Oneindia Tamil News

ராசிபுரம்: ராசிபுரத்தில் 4-ஆவதும் பெண்ணாக பிறந்துவிட்டதால் அதை யாருக்காவது விற்று விடுமாறு கணவரும், மாமனாரும் தொல்லை கொடுப்பதாக பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ராசிபுரம் மெட்டாலாவை சேர்ந்தவர் பரிமளா. இவரது கணவர் மாரிமுத்து. இவர்களுக்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதால் பரிமளா மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

Lady gives complaint against Husband for demanding to sell their 4th girl child near Rasipuram

இந்த நிலையில் அவருக்கு அண்மையில் 4-ஆவது பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையை விற்று விடுமாறு கணவர் மாரிமுத்துவும், மாமனார் கண்ணுசாமியும் பரிமளாவை வற்புறுத்தி வருகின்றனர்.

குழந்தை பிறந்தும்.. குடித்தனம் நடத்த கூட்டி செல்லாத கணவர்.. குழந்தையை நீரில் மூழ்கடித்து தற்கொலை குழந்தை பிறந்தும்.. குடித்தனம் நடத்த கூட்டி செல்லாத கணவர்.. குழந்தையை நீரில் மூழ்கடித்து தற்கொலை

இதற்கு பரிமளா மறுப்பு தெரிவித்தும் அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் அவர் மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மற்றும் மாமனார் மீது புகார் கொடுத்துள்ளார்.

ராசிபுரத்தில் பிஞ்சு குழந்தைகளை ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா கடத்தி விற்பனை செய்த ஆடியோ அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குழந்தை விற்பனை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

English summary
Lady in Rasipuram gives complaint against Husband and Father in law for pressuring her to sale the 4th girl child who was born few days ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X