நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்ப பார்த்தாலும் மனைவியிடம்.. மந்திரவாதி தொல்லை.. தட்டிக் கேட்ட கணவர்.. சரமாரி குத்தி கொலை

நபரை குத்தி கொன்ற மந்திரவாதியை போலீசார் தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

நாமக்கல்: மனைவியிடம் எப்பவுமே ஆபாச பேச்சு.. பாலியல் தொல்லை தந்துள்ளார் மந்திரவாதி ஒருவர்.. இதை தட்டிக்கேட்ட கணவனை அந்த மந்திரவாதி கத்தியாலேயே குத்தி கொலை செய்துள்ளார்!

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணன்.. 55 வயதாகிறது.. இவர் ஒரு சென்ட்ரிங் தொழிலாளி... இவருடைய மனைவி வசந்தா.

45 வயதாகும் வசந்தா, நாச்சிப்பட்டியில் பியூட்டி பார்லர் வைத்திருக்கிறார்.. அதனுடன் டெய்லரிங் கடையும் சேர்த்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு 21 வயதில் மனோஜ் என்ற மகனும், 20 வயதில் உமா மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

ராம்ஜெத்மலானி

ராம்ஜெத்மலானி

இந்நிலையில் சில காலமாக, ராமச்சந்திரன் என்பவருடன் கிருஷ்ணன் குடும்பத்துக்கு அறிமுகமாகமானது.. ராமச்சந்திரனுக்கு 30 வயது.. ராம்ஜெத்மலானி என்ற இன்னொரு பெயரும் இவருக்கு உள்ளது. கல்யாணம் ஆகவில்லை.. மாந்திரீகம், ஜோதிடம் சொல்லியும் சொல்லி வருகிறார்..

மந்திரவாதி

மந்திரவாதி

ஒருமுறை, தன் குடும்பத்தில் பண கஷ்டம் இருப்பதாக மந்திரவாதியிடம் கிருஷ்ணன் புலம்பி உள்ளார். இதற்கு தாம் உதவி செய்வதாக மந்திரவாதி சொல்லவும், அதற்கு கிரு‌‌ஷ்ணன் குடும்பத்தினர் சரி என்று சம்மதித்துள்ளனர்.. மாந்திரீகம், பரிகாரம் செய்தால், பணம் கொட்டும் என்றும் ராமச்சந்திரன் அடிக்கடி சொல்லி வந்துள்ளார். இதையே சாக்காக வைத்து கொண்டு அடிக்கடி வீட்டுக்கும் வர ஆரம்பித்தார் மந்திரவாதி.

ஆபாச பேச்சு

ஆபாச பேச்சு

அப்போதுதான் வசந்தாவிடம் பழக்கம் அதிகமானது.. போன் நம்பரை வாங்கி வைத்து கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளார்.. பிறகு ஆபாசமாக பேச ஆரம்பித்துள்ளார்.. வீட்டிற்கு வந்து பாலியல் தொல்லையும் தந்துள்ளார்.. இதனால் அதிர்ந்து போன வசந்தா, கணவரிடம் சொன்னார். உடனே இதுகுறித்து கிருஷ்ணன் வெண்ணந்தூர் போலீசிலும் புகார் தந்தார். போலீசாரும் ராமச்சந்திரனை நேரில் அழைத்து கண்டித்து அனுப்பி வைத்தனர்.

கொலை

கொலை

இது மந்திரவாதிக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது... குடிபோதையில் கிரு‌‌ஷ்ணன் வீட்டிற்கு சென்ற மந்திரவாதி.. தகராறில் ஈடுபட்டார்.. இருவரும் சண்டை போட்டு கட்டி உருண்டனர்.. பிறகு திடீரென மந்திரவாதி தப்பி ஓடினார்.. இதனால் குழப்பமடைந்த கிருஷ்ணன், எங்கு போனார், வேறு எங்காவது மறைந்திருக்கிறாரா? திரும்பவும் வீட்டிற்குள் வருவாரா என்பதை தெரிந்து கொள்ள பின்னாடியே துரத்தி கொண்டு ஓடினார்.

தலைமறைவு

தலைமறைவு

அப்போது அங்கேயே மறைந்திருந்த மந்திரவாதி, மறைத்து வைத்திருந்த கத்தியால் கிரு‌‌ஷ்ணனின் வயிறு, கை, கழுத்து பகுதிகளில் சரமாரியாக குத்தினார். அலறி துடித்த கிருஷ்ணனை, அக்கம்பக்கத்தினர் வெண்ணந்தூரில் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி ராமச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

English summary
astrologer gave sexual torture to wife and murdered her husband near namakkal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X