நாமக்கலில் திருச்செங்கோடு ஒன்றியத்தில் முதல் கவுன்சிலரானார் திருநங்கை ரியா
Recommended Video
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
விளாத்திக்குளத்தில் 3 பெட்டிகளை காணவில்லை.. திமுக வெற்றியை தடுக்க சதி.. ஸ்டாலின் பரபரப்பு புகார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திருநங்கை ரியா என்பவர் போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த அவர் 950 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.