அரிவாளை எடுக்கிறார்.. சுட்டு பொசுக்குகிறார்.. தனுஷ் ரசிகர்களாம்.. 3 டிக் டாக் இளைஞர்களுக்கு வலை!
ஆயுதங்களுடன் இளைஞர்கள் டிக் டாக் வீடியோ வெளியிட்டுள்ளனர்
Recommended Video
நாமக்கல்: ஒருவர் அரிவாளை எடுக்கிறார்.. இன்னொருவர் துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட்டு பொசுக்குகிறார்.. இப்படி ஒரு டிக்-டாக் வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் யார் என்று தெரியாமல் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
டிக்-டாக் வேண்டும் என்று அடம்பிடித்து கோர்ட்டில் வாதாடி, இந்த ஆப்பை நிறைய பேர் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு புறம் இதற்கு பாராட்டுக்கள் இருக்கிறது என்றால், மற்றொரு புறம் சமுதாயம் நாசத்துக்கு பெரிய காரணமாகவும் இதே டிக்-டாக் ஆப்தான் இருக்கிறது. இப்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் லட்சுமி தெரு பகுதியை சேர்ந்த கல்லூரியின் மாணவர்கள் சிலர் இந்த டிக்டாக் ஆப்பை வெளியிட்டுள்ளனர். அநேகமாக இவர்கள் நடிகர் தனுஷ் ரசிகர்களாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் புல்லட்டில் வருகிறார். அவரை 3 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்காரமான ஆயுதங்களுடன் வழிமறித்து நிற்கிறது.
புல்லட்டில் வரும் இளைஞர், இவர்களை பார்த்ததும் பைக்கில் இருந்து கீழே இறங்கி நின்றதும், அந்த கும்பல், இவரை தாக்க வருகிறது. ஆனால் அதற்குள் இளைஞர் பைக்கில் ரெடியாக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து 3 பேரில் ஒருவரைசுட்டு கொல்கிறார். மற்றவர்கள் இதை பார்த்து பயந்து தெறித்து ஓடுகிறார்கள். இதுதான் அந்த சீன்!
சிட்டி 3.0 ரீ லோடட்.. ரோபோவின் சொல்படி பறக்க போகும் சந்திரயான் 2.. வியப்பூட்டும் விஷயம்!
தங்களை ரவுடிகளாகவும், தாதாக்களாகவும் சித்தரித்து கொண்டு இந்த வீடியோ வெளியிட்டுள்ளனர். இதை இணையத்திலும் பதிவிட, ராசிபுரம் போலீசாரின் பார்வைக்கு போயுள்ளது. இதையடுத்து, அரிவாள், கத்தி, துப்பாக்கி என ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையில் வீடியோவை பதிவிட்ட இளைஞர்கள் யார் என்று விசாரித்து வருகிறார்கள்.