நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராத்திரியில் சித்ரவதை.. குடி.. உருப்படாத கணவர்.. நண்பருடன் சேர்ந்து ஆற்றில் தள்ளி விட்ட செல்வி!

Google Oneindia Tamil News

Recommended Video

    ராத்திரியில் சித்திரவதை.. குடி.. உருப்படாத கணவர்.. நண்பருடன் சேர்ந்து ஆற்றில் தள்ளி விட்ட செல்வி!

    நாமக்கல்: தினமும் குடிச்சிட்டு வந்து, ராத்திரியில் சித்ரவதை செய்த கணவனை.. நண்பன் பெருமாளுடன் சேர்ந்து காவிரி ஆற்றில் தள்ளி விட்டு கொலை செய்துவிட்டார் செல்வி.. இதையடுத்து பெருமாள் தந்த பாலியல் தொல்லை தாங்காமல் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளார் செல்வி!

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவரது கணவன் வெங்கடேசன். கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடிச்சிட்டு வந்து, செல்வியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார்.

    Wife Killed her husband and surrender to Namakkal Police

    இதனால் கடுப்பிலும், வெறுப்பிலும் இருந்த நேரத்தில்தான் பெருமாள் அறிமுகமானார். விசைத்தறி தொழிலில் செல்வியுடன் வேலை பார்ப்பவர்தான் இந்த பெருமாள். வீட்டு கஷ்டத்தை எல்லாம் பெருமாளிடம் செல்வி சொல்லி அழுதிருக்கிறார்.

    இதனைக்கேட்ட பெருமாள், வெங்கடேஷை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக போன 8-ம் தேதி ராத்திரி, வெங்கடேஷிற்கு அளவுக்கதிகமான சரக்கு வாங்கி தந்துள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த வெங்கடேஷூக்கு அன்று நிற்க முடியாத அளவுக்கு தண்ணி அடித்தார். அந்த நேரத்தில், காவேரி நகர் பகுதியில் உள்ள காவிரி ஆற்று பாலத்தின் மீது இருந்து வெங்கடேஷை பெருமாள் ஆற்றில் தள்ளி விட்டு கொலை செய்துள்ளார்.

    இதற்கு பிறகுதான் பெருமாள் தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார். இந்த கொலை பண்ணின விஷயம் வெளியே எதுவும் தெரியாமல் இருக்கணும்ன்னா, தன்னுடன் உறவு வைத்து கொள்ள வேண்டும் என்று செல்வியை மிரட்டி உள்ளார். இப்படி மிரட்டி மிரட்டியே செல்வியுடன் பலமுறை உறவும் வைத்துள்ளார் பெருமாள்.

    ஏற்கனவே வெங்கடேஷூடன் நொந்து போய் வாழ்க்கையை ஓட்டி, அதனால் ஒரு கொலைக்கும் காரணமாக இருந்து.. பிறகு பெருமாளுடன் தினமும் பாலியல் தொல்லைக்கும் ஆளாவதை நினைத்து செல்வி அழுது கண்ணீர் வடித்தார். நேராக ஸ்டேஷனில் போய், தான்தான் பெருமாளிடம் சொல்லி, கணவனை காவிரி ஆற்றில் தள்ளிவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.

    இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பெருமாளை தேடி வருகின்றனர். பின்னர் செல்வியின் வாக்குமூலத்தை வைத்து காவிரி ஆற்றில் வெங்கடேஷின் சடலம் உள்ளதா என்றும் தேடி வருகிறார்கள்.

    English summary
    Wife killed husband with the help her friend due to family issue and surrender to the Namakkal Police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X