கள்ளக்காதலுக்காக கொலை - ஒரு செல்லில் 2 சிம்... மூன்றாவதுக்கு ஆசைப்பட்ட கணவனின் கழுத்தறுத்த மனைவி
மனைவியை விட்டு இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்த விசைத்தறி தொழிலாளி மீண்டும் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டதால் 2வது மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
நாமக்கல்: தூங்கிக்கொண்டிருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய இரண்டாவது மனைவியை திருச்செங்கோடு போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலுக்காக இந்த கொலை நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் கல்யாண சுந்தரம் என்பதாகும். இவர் தண்ணீர் பந்தல் பாளையத்தில் வசித்து வருகிறார். எம்ஜிஆர் நகரில் விசைத்தறி தொழில் செய்து வந்த அவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்.
நெசவு பட்டறையில் தன்னுடன் வேலை செய்து வந்த பூங்கொடி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஒரு செல்லில் 2 சிம் போடுவது போல இரண்டு மனைவிகள் இருந்தும் கல்யாண சுந்தரத்திற்கு காமம் அடங்கவில்லை. பட்டறையில் வேலை செய்த பல பெண்களுடன் அவ்வப்போது லீலை தொடர்ந்தது. பட்டறையிலேயே பெண்களுடன் உறவை தொடர்ந்தார் கல்யாண சுந்தரம்.
எம்.பி. இல்லனா.. பி.பி(பிக் பாஸ்).. இது யாரோட மைண்ட்வாய்ஸ் தெரியுமா?
முதல் மனைவி போல இரண்டாவது மனைவி பூங்கொடியால் கண்டு காணமல் இருக்க முடியவில்லை. கல்யாண சுந்தரத்துடன் சண்டை போட்டார்.
வாக்குவாதம் அடிதடி வரை போனது ஆனாலும் கல்யாணசுந்தரம் அடங்கவில்லை. பூங்கொடியை தறி பட்டறைக்கு வரவேண்டாம் என்று கூறி தடுத்தார் கல்யாண சுந்தரம்.
கணவன் மீது ஆத்திரம் அதிகமாகவே, பூங்கொடி சமயம் பார்த்து காத்துக்கொண்டிருந்தார். போதையில் உறங்கிக்கொண்டிருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினர். அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கல்யாண சுந்தரத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.கழுத்து அறுக்கப்பட்டிருந்த விதம் போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்தது.
பல கோணங்களில் விசாரித்த காவல்துறையினர், கல்யாண சுந்தரத்தின் நடத்தையும், பூங்கொடி கல்யாண சுந்தரம் இடையே இருந்த பிரச்சினையும் தெரியவந்தது. சந்தேகத்தை பூங்கொடி மீது திருப்பிய போலீசார், தங்கள் பாணியில் விசாரிக்கவே, நடந்த உண்மைகளை பூங்கொடி போலீசில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் பூங்கொடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவி குழந்தைகளை விட்டு விட்டு இரண்டாவது திருமணம் செய்த நிலையிலும் வேறு பெண்களுடன் ஏற்பட்ட தொடர்பு உயிரை காவு வாங்கியுள்ளது.