குட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்
இளம்பெண்ணை கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்
Recommended Video
நாமக்கல்: குட்டையில் சடலமாக மிதந்து கிடந்தார் ஷோபனா.. சிதறி கிடந்த சாக்லேட்டுகளும், துணிகளும் அவரது கொலையின் கொடூரத்தை உணர்த்திவிட்டது!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தம்பதி செந்தில் - ஷோபனா. இவர்களுக்கு 11 வயதில் தேவா, 4 வயதில் சச்சின் என்ற மகன்கள் உள்ளனர். ஷோபனாவுக்கு 29 வயதாகிறது.. திருச்செங்கோட்டில் ஒரு பியூட்டி பார்லரில் வேலைபார்த்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவாவுக்கு பிறந்த நாள். அதனால் புது துணி வாங்க வெளியே சென்ற ஷோபனாவை காணவில்லை. இரவு 9 மணிக்கு திடீரென கணவருக்கு ஷோபனா போன் செய்து, கடைசி பஸ்ஸை விட்டுட்டேன்.. அதனால ஃபிரண்ட் கூட காரில் வந்து வீட்டில் இறங்கிடுறேன்" என்று சொன்னார்.
ஆனால் நடுராத்திரி ஆகியும் ஷோபனா வீட்டுக்கு வரவில்லை. அதனால் பதறி போன கணவர் உடனே இதுகுறித்து மொளசி போலீஸில் புகார் தந்தார். இதையடுத்து ஷோபனா போலீசார் தேடி வந்த நிலையில், அவரது சடலம் புள்ளியம்பாளையம் ரோட்டோரம் கிடந்த ஒரு குட்டையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த குட்டைக்கு பக்கத்தில் ஒரு தோட்டம் உள்ளது. அங்கு ஷோபனா தன் மகனுக்காக வாங்கிய புது துணி, பர்த்டே சாக்லேட்டுகள் சிதறி கிடந்தன. இதையடுத்து ஷோபனா உடம்பில் நகைகள் அப்படியே இருந்தன.. அதனால், நகை, பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்காது என்ற முடிவுக்கு வந்த போலீசார், பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.
என்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்!
இதையடுத்து அவரது செல்போனை ஆராய்ந்தபோது, ஷோபனாவின் கள்ள உறவு தெரியவந்தது. கடைசியாக திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞருடன் பேசியதால், போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் தகாத உறவால் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. கள்ளக்காதலன் எதற்காக ஷோபனாவை கொலை செய்தான் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.