இதயத்தில் பிரச்சினை.. மூச்சுவிட முடியவில்லை.. பச்சிளம் குழந்தைக்கு உதவுங்கள் ப்ளீஸ்
சென்னை: பிறந்து 15 நாளே ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவி செய்யுங்கள்!
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அகிலேஷ் பிறந்து 15 நாட்கள்தான் ஆகிறது. கடலூரில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அகிலேஷ் ஆம்புலன்சில் பிறந்தான். அகிலேஷ் பிறந்ததில் இருந்தே அவனுக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை இருந்து உள்ளது.
சரியாக குழந்தை பிறக்கும் நேரம் அகிலேஷின் அம்மாவிற்கு டெங்கு இருந்துள்ளது . அதேபோல் அகிலேஷின் அப்பா கார்த்திகேயன் தனது அப்பாவை இழந்து இருக்கிறார். இதனால் பொருளாதார ரீதியாக கார்த்திகேயன் கடுமையாக சிரமப்பட்டு வருகிறார்.
தரிப்பது முதல் இதயம் பாதிக்கப்பட்டு இருக்கும் அகிலேஷ் முதலில் புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அகிலேஷுக்கு அடுத்த 15 நாட்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். ஆனால் அகிலேஷ் அப்பாவிடம் சிகிச்சைக்கு பணம் இல்லை .
செய்ய வேண்டிய சிகிச்சை - Open heart Surgery, Arterial Switch Operation + Explantation of PDA stent + Division of PDA
இதற்கு மொத்தம் ரூ 5,00,000 செலவாகும். அகிலேஷுக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அகிலேஷ் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் அகிலேஷ் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
RECOMMENDED STORIES