நியூயார் கிளப்பில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி
நியூயார்க்: புரூக்ளினில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் நியூயார்க் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரூக்ளின் வீக்ஸ்வில்லே பகுதியில் உள்ள 74 உடிக்கா அவென்யூவில் தனியார் கிளப் ஒன்றில், மர்ம நபர் ஒருவரால் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடந்ததாக சனிக்கிழமை காலை அந்த நாட்டு நேரப்படி 7 மணிக்கு போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இளைஞர்களிடமும் துப்பாக்கி கலாச்சாரம் பரவியுள்ளது.
சராசரியாக ஒரு நாளில், துப்பாக்கிச்சூட்டால், அமெரிக்காவில் சுமார் 100 பேர் இறக்கின்றனர்.