கொடுமை.. 36 வயசு நபருடன் 64 வயசு பெண் உல்லாசம்! "டாக்டர் டூ போலீஸ் ஸ்டேஷன்.." பரபரக்கும் புதுச்சேரி
64 வயது பாட்டியை பலாத்காரம் செய்த இளைஞரை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்
நியூயார்க்: விருப்பப்பட்டு உடலுறவில் ஈடுபட்டபோது, 36 வயது இளைஞர் அத்துமீறி நடந்துகொண்டதாக, 64 வயது வெளிநாட்டு பாட்டி புதுச்சேரி போலீசில் புகார் தந்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பி வருகிறது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்தவர் பத்ரிசியா போஃல்டஸ்.. 64 வயதாகிறது. இவர் கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரிக்கு டூர் வந்திருக்கிறார்.. அப்போது அங்குள்ள இடங்களில் ஷாப்பிங் செய்துள்ளார்.
அப்படியே, லால்பகதூர் சாஸ்திரி சாலையில் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கும் சென்றுள்ளார்.. அந்த கடை ஓனர் பெயர் மேஹ்ராஜ் பாத்.. இவர் காஷ்மீரை சேர்ந்தவர் என்பதால், அந்த கடையில் உல்லன் துணிகளை பாட்டி வாங்கியுள்ளார்.
கொடுமை.. 17 வயதான சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்த கும்பல்.. வீடியோ எடுத்து மிரட்டல்
விசா
இதற்கு பிறகு இருவரும் அறிமுகமாகி, நன்றாக பேசி நண்பர்களாகி உள்ளனர்.. இந்தியாவுக்கு டூர் வந்திருப்பதாகவும், புதுச்சேரி பற்றி கேள்விப்பட்டு அதை பார்க்க வந்திருப்பதாகவும் அந்த பாட்டி சொல்லி உள்ளார். சிறிது நேரம் பேசிவிட்டு, அங்கிருந்து கிளம்பி விட்டார்.. கடந்த ஒரு மாதம் இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளார்.. இந்நிலையில், நேற்றைய முன்தினம் மறுபடியும் புதுச்சேரிக்கு வந்துள்ளார்... இன்றுடன் அதாவது 2ம்தேதியுடன் பாட்டிக்கான விசா முடிந்துவிடுவதால், தாய்நாட்டுக்கு செல்ல தயாராகி உள்ளார்..
ஹோட்டல் ரூம்
அதனால், தங்கியிருக்கும் ஹோட்டல் ரூமை காலி செய்ய வேண்டும் என்பதால், ஏற்கனவே தனக்கு அறிமுகமான மேஹ்ராஜை சந்தித்துள்ளார் பாட்டி.. ஹோட்டல் ரூமை காலி செய்துதர உதவுமாறும் கேட்டுள்ளார்.. இதனையடுத்து அன்றைய தினம் இரவே, பத்ரிசியா தங்கியிருந்த ஹோட்டல் ரூமுக்கு மேஹ்ராஜ் வந்துள்ளார். அப்போது இருவரும் உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது.. அப்போது வலுக்கட்டாயமாக அத்துமீறி மேஹ்ராஜ் ஈடுபடவும் பாட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது.. இதனால் தன்னை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி மேஹ்ராஜிடம் கேட்டுள்ளார்.
ஓதியஞ்சாலை
ஆனால், அவர் மறுத்துவிடவும், அங்கிருந்த சிலர், பாட்டியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போதுதான், அவர் வன்கொடுமை செய்யப்பட்டதை டாக்டர்கள் கண்டறிந்தனர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்... உடனடியாக போலீசாரும் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, பாட்டியிடம் நடந்ததை விசாரித்தார்கள்.. இறுதியில் பாட்டி தந்த புகாரின் அடிப்படையில், போலீசார் மேஹ்ராஜ் பாதை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு ஜெயிலில் அடைத்தனர். பாட்டிக்கு இப்போது சீரியஸாக இருக்கிறதாம்.. தொடர் சிகிச்சையும் நடந்து வருகிறது..
வலுக்கட்டாய முத்தம்
அமெரிக்கா நாட்டை சேர்ந்த பாட்டியை, காஷ்மீரை சேர்ந்த இளைஞர் பலாத்காரம் செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... ஏற்கனவே இப்படித்தான் கடந்த மாதம், மும்பையில் ஒரு சம்பவம் நடந்தது.. தென்கொரியாவை சேர்ந்த இளம்பெண் யூடியூபர் ஒருவர், மும்பையில் தங்கி லைவ் வீடியோ பதிவு செய்த நேரத்தில், குறுக்கே புகுந்த இளைஞர்கள் அவரிடம் அத்துமீறி முத்தம் கொடுக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.. இப்போது இன்னொரு வெளிநாட்டு பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.