நன்றாக இருக்கிறேன்.. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு!
நியூயார்க்: நான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு தடுப்பாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
Recommended Video
கொரோனா உலகம் முழுக்க தீவிரமாக பரவி வந்த நிலையில் அதற்கு எதிராக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பலன் அளிக்குமா என்று கேள்வி எழுந்தது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்து ஆகும்.
இதை அமெரிக்க அதிபர் டிரம்ப் மிக தீவிரமாக பிரபலப்படுத்தி வந்தார். அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தும் பயன்படுத்தப்பட்டது. மேலும் டிரம்ப் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனா தாக்குதலுக்கு தடுப்பாக தான் உட்கொண்டு வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
எதிர்ப்பு எதிரொலி.. திருப்பதி கோவில் சொத்துக்களை விற்க கூடாது.. ஆந்திர மாநில அரசு அதிரடி உத்தரவு
என்ன பேட்டி
இது தொடர்பாக டிரம்ப் கடந்த வாரம் அளித்த பேட்டியில் நான் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கடந்த ஒன்றரை வாரமாக சாப்பிடுகிறேன். நான் தினமும் இந்த மருந்தை சாப்பிடுகிறேன். இதோடு சின்க் மருந்தை சேர்த்து சாப்பிடுகிறேன். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து நன்மை பயக்கும். அது தொடர்பாக நான் நிறைய நல்ல விஷயங்களை கேட்டு இருக்கிறேன். அமெரிக்காவில் பலர் இந்த மருந்தை உட்கொள்கிறார்கள், என்றார் .
இனி இல்லை
இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது டிரம்ப் புதிய கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மறுத்து சாப்பிடுவதை நிறுத்தி உள்ளேன். இரண்டு வாரம் இந்த மருந்தை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. அந்த கால அவகாசம் முடிந்துள்ளது. இதனால் இந்த மருந்தை எடுப்பதை நிறுத்தி இருக்கிறேன். இதனால் எனக்கு எந்த விதமான பக்க விளைவும் வரவில்லை. பார்க்கும் உங்களுக்கே அது தெரியும்.
தவறு இல்லை
இதை பற்றி சிலர் தவறாக எழுதினார்கள். ஆனால் நான் இப்போது நன்றாக இருக்கிறேன். நான் இப்போதும் இங்குதான் உங்கள் முன் இருக்கிறேன். வெள்ளை மாளிகையில் சிலருக்கு கொரோனா இருந்தது. அதனால் நான் இந்த மருந்தை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் இந்த மருந்தை நான் எடுத்தேன், என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு இருக்கிறார்.
தடை செய்ய முடிவு
அவர் இந்த மருந்தை நிறுத்துவதாக கூறிய சில மணி நேரங்களில் உலக சுகாதார மையம் இதன் பயன்பாட்டை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மலேரியாவிற்கு எதிராக மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.