உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் 2 லட்சத்தை தாண்டியது
நியூயார்க்: உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.
Recommended Video
சர்வதேச நாடுகளை கடந்த 4 மாதங்களாக கொரோனா கொடூரமாக தாக்கி நிலை குலையவைத்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கு அதிகமான மனித உயிர்களை குடித்திருக்கிறது கொரோனா.
கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,60,651.
அமெரிக்காவில் கொரோனால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 54,256 ஆகும். உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் அதிக கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலியில் 26,384 பேர் மாண்டுபோயுள்ளனர். ஸ்பெயினில் 22,902 பேரும் பிரான்சில் 22,614 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் பலத்த காற்றுடன் மழை- தமிழகத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை
இங்கிலாந்தில் 20,319 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர். அதேநேரத்தில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 8,36,683 பேர் குணமடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.