கொரோனா: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,528 பேர் பலி- உயிரிழப்பு 22,105 ஆக அதிகரிப்பு
நியூயார்க்: அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா தொற்று நோய் தாக்குதலுக்கு 1528 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22,105 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
கொரோனா தொற்று நோய் உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று நோய்க்கு இதுவரை உலக அளவில் மொத்தம் 1,14,179 பேர் பலியாகி உள்ளனர்.
அனைத்து நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை 18,51,734. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எண்ணிக்கை 4,23,286. இதில் அமெரிக்காவில்தான் மிக அதிக அளவு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1528 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 22,105 ஆனது. இத்தாலியில் ஒரே நாளில் 431 பேர் உயிரிழந்த நிலையில் அந்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 19,899 ஆக அதிகரித்தது.
இங்கிலாந்தில் ஒரே நாளில் 737 பேர் நேற்று மரணமடைந்தனர். அங்கு மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 10,612. ஸ்பெயினில் ஒரே நாளில் 603 பேர் மரணமடைந்ததால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 17,209 ஆக அதிகரித்தது.
கொரோனா.. அமெரிக்க வரலாற்றில் முதல்முறை.. 50 மாகாணங்களிலும் பேரிடர் அறிவிப்பு.. டிரம்ப் அதிரடி முடிவு
பிரான்ஸில் ஒரே நாளில் 561 பேர் பலியாகினர். அங்கு மொத்தம் 14,393 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியில் ஒரே நாளில் 151 பேர் பலியானதால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,022 ஆனது. பெல்ஜியத்தில் 254 பேர் நேற்று பலியாகினர். அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 3,600 ஆக உயர்ந்தது.
ஈரானில் 4,474 ; ஜெர்மனியில் 3,022; பெல்ஜியத்தில் 3,600 பேர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர்.