என்ன செய்ய டங் ஸ்லிப் ஆயிட்டு.. பிரதமர் மோடியை இந்திய ஜனாதிபதினு அழைத்த இம்ரான் கான்!
Recommended Video
நியூயார்க்: ஐநா பொது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய ஜனாதிபதி என இம்ரான் கான் வாய்த் தவறி கூறியுள்ளது பெரும் கிண்டலுக்குரியதாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 74-ஆவது பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் இம்ரான் கான் நீண்ட உரையை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பதற்கு பதிலாக இந்திய ஜனாதிபதி என கூறினார்.
இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இது போல் இம்ரான் கானின் டங் ஸ்லிப்பாவது முதல் முறையல்ல. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மாநாட்டில் ஈரான் பிரதமர் ஹூசைன் ரவ்வானியுடன் டெஹ்ரானில் செய்தியாளர்களை இம்ரான் கான் சந்தித்தார்.
அப்பேது ஜெர்மனியும் பிரான்சும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன என கூறுவதற்கு பதிலாக அவர் ஜெர்மனியும் ஜப்பானும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன என்றார். இது சமூக வலைதளங்களில் கிண்டலுக்குள்ளானது.