என்னா சந்தோஷம் அந்த குரங்கு முகத்துல.. புரிஞ்ச மாதிரியே பேப்பரை வேற எடுத்து படிச்சு பாக்குதே!
தனக்கு வந்த பரிசு பெட்டியை மிகுந்த ஆர்வத்துடன் திறந்து பார்த்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது குரங்கு ஒன்று.
நியூயார்க்: தனக்கு வந்த பரிசு பெட்டியை மிகுந்து ஆர்வத்துடன் திறந்து பார்த்து, அதில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை பார்த்து குரங்கு உற்சாகமடைவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் மற்றொருவரை மகிழ்விக்க பரிசுகள் கொடுப்பது வழக்கம். பெற்றோர்கள் ஏதாவது ஒரு பொருளை பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்து ஆச்சரியப்படுத்தும் போது, குழந்தைகள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷமும் உற்சாகமும் பிறக்கும். அதுவே அந்த பெற்றோருக்கு வாழ்நாள் மகிழ்வை கொடுக்கும்.
வாழ்க்கை ரொம்ப சிம்பிள்ங்க.. நாளை.. நாம் வெல்லலாம்!
இது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பொருந்தும் என நிரூபித்திருக்கிறது அமெரிக்காவில் உள்ள குரங்கு ஒன்று. ஜார்ஜ் என பெயர் கொண்ட அந்த குரங்குக்கு, அதன் உரிமையாளர் ஒரு பரிசு பொருளை வாங்கிக்கொடுத்தார்.
அதைப்பார்த்து உற்சாகமடைந்த அந்த குரங்கு உடனடியாக அந்த பெட்டியை வாங்கி திறந்து பார்த்தது. அதன் உள்ளே ஒரு தண்ணீர் பாட்டில் இருப்பதை பார்த்த ஜார்ஜ், சந்தோஷத்தில் துள்ளி குதித்தது. அந்த பாட்டிலின் மூடியை திறந்து பார்த்த குரங்கு, மீண்டும் அதை சரியாக மூடி வைத்துவிட்டது. பின்னர் அந்த பெட்டியில் இருந்த கையேட்டை எடுத்து பிரித்து படித்து பார்த்து உரிமையாளரை வியப்படைய வைத்துவிட்டது ஜார்ஜ்.
குரங்கின் இந்த செயலை வீடியோ எடுத்து அதை தனது சமூகவலை தளத்தில் பகிர்ந்தார் ஜார்ஜின் உரிமையாளரான ரெக்ஸ் எனும் பாஸ்கெட் பால் விளையாட்டு வீரர். அந்த வீடியோவை பார்த்த அசந்துபோன நெட்டிசன்கன், உடனே அதை வைரலாக்கிவிட்டனர்.