ஆறு வயது மகளை நூறு முறை சீரழித்து லைவ் செய்த காம கொடூரன் - 120 ஆண்டுகள் சிறை
நியூயார்க்: இளம் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஆறு வயது மகளை நூறு முறை பாலியல் பலாத்காரம் செய்து அதை லைவ் ஆக சிறுவர் சிறுமியர் போர்ன் சைட்டில் பதிவேற்றியிருக்கிறார் காம கொடூர தந்தை. வக்ர பிடித்த அந்த நபருக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறார்.
கொடூர மனம் படைத்த அந்த நபரின் பெயர் ஸ்டீவன் டக்ளஸ் குரூக் என்பதாகும். 29 வயதான அந்த இளைஞர் தனது மகளை சீரழித்திருக்கிறான். இவன் செய்த கொடூர காரியங்களைப் பற்றி வெளியில் தெரியாமல் இருந்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவின் காணமல் போன மற்றும் சீரழிக்கப்பட்ட குழந்தைகள் தேசிய மையத்திற்கு வந்த புகார்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியில் வர காரணமாக அமைந்தது.
சிறுமி பலாத்காரம்
பிறந்த நாள் முதலாகவே பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்து அதை live.me என்ற சைல்ட் போர்ன் வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருப்பதாக புகாரில் கூறவே, அந்த நபரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரியவந்தன.
சிறுமியை சீரழித்த வக்ரபுத்திக்காரன்
சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அந்த கொடூரன் அதை தனது மொபைல் போனில் வீடியோவாக படம் பிடித்து இணையதளத்தில் லைவ் ஆக ஒளிபரப்பியிருக்கிறான். இதனை ஆதாரப்பூர்வமாக போலீசார் கண்டுபிடித்தனர். சிறுமியை பலாத்காரம் செய்த பல வீடியோவையும் கண்டுபிடித்தனர்.
இளம்பெண்ணும் உடந்தை
அந்த கொடூரனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தும் அவனது காதலிக்கும் இந்த விசயம் தெரியும். இருந்தாலும் அவனது செயலுக்கு அந்தப்பெண்ணும் உடந்தையாக இருந்திருக்கிறார். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வாழ்நாள் முழுவதும் சிறை
ஓராண்டு காலமாக இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சிறுமியை சீரழித்து அதை இணையத்தில் பதிவேற்றிய வக்ரபுத்தி இளைஞனை குற்றவாளி என்று திங்கட்கிழமையன்று நீதிபதி தீர்ப்பளித்தார். அவனுக்கு 120 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.