இந்திய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... துரத்திச் சென்று தாக்கிய 54 வயது நபர் கைது
நியூயார்க் : நியூயார்க்கில் இந்திய வம்சாவளி பெண்ணி\ம் ஆபாச செய்கை செய்து, பின்னர் அவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
அவ்நீத் கவுர் என்ற பெண் ஒருவர், தமது தோழியுடன் மன்ஹாட்டன் பகுதியில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர், அவ்நீத் கவுரிடம் ஆபாச செய்கை செய்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
அங்கிருந்து அவ்நீத் கவுரும், அவரது தோழியும் இறங்கி செல்ல அவர்களை பின் தொடர்ந்து அந்த நபர் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவ்நீத் கவுரை பின்புறமாக இருந்து ஆவேசமாக தள்ளி தாக்கி உள்ளார்.
எதிர்பாராத தாக்குலால் நிலைகுலைந்த கவுருக்கு தலை, முகம், கை, கால்கள் என கடுமையாக காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணையை தொடங்கினார். அவ்நீத் கவுரை சரமாரியாக தாக்கி ஆபாசமாக நடந்து கொண்ட அந்த நபரை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபரின் பெயர் அல்லாஷீத் என்பது தெரிய வந்தது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அல்லாஷீத்துக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும்.