15 வயசு பையனுக்கு.. தன் நிர்வாண போட்டோவை அனுப்பிய ஸ்கூல் டீச்சர்.. அமெரிக்காவில் ஒரு அக்கப்போர்
நியூயார்க்: "என் நிர்வாண போட்டோவை இப்பதான் முதல் முதலா அனுப்பிட்டேன்.. வேற யாருக்கும் இப்படி அனுப்பியதில்லை, இனி இப்படிசெய்ய மாட்டேன்" என்று ஆபாச போட்டோவை தன்னிடம் படிக்கும் 15 வயசு மாணவனுக்கு அனுப்பி வைத்துள்ளார் கிளாஸ் டீச்சர் ஒருவர்... இதையடுத்து அந்த ஆசிரியைக்கு 2 வருடம் சிறை தண்டனை உறுதியாகி உள்ளது.
அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா- கனாவா கவுண்டியில் ஆண்ட்ரு ஜாக்சன் என்ற நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.. இங்கு டீச்சராக இருந்தவர் ராம்சே கார்பென்டர் பியர்ஸ்.. 29 வயதாகிறது.. இவர் ஒரு முன்னாள் அழகி.. கடந்த 2014-ம் ஆண்டு மிஸ் கென்டக்கி பட்டத்தை வென்றவர்.
கென்டக்கி யுனிவர்சிட்டியில் இந்த பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டது... இவருக்கு கல்யாணமும் ஆகிவிட்டது.. கடந்த 2018-ம் ஆண்டு ஒருநாள் திடீரென இவரை போலீசார் கைது செய்தனர். அதற்கு காரணம் பள்ளியில் படிக்கும் 15 வயசு மாணவனுக்கு தன்னுடைய ஆபாச போட்டோவை அனுப்பி வைத்திருந்ததுதான்.
முழுக்க நிர்வாண போட்டோக்கள் அவை.. மகனின் செல்போனுக்கு நிர்வாணமாக போட்டோக்கள் வந்திருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதுவும் கிளாஸ் டீச்சரே இப்படி போட்டோ அனுப்பி வைத்தது பெரிய சர்ச்சையாக வெடித்தது.. இந்த சம்பவம் அப்போது ஊடகங்களால் பரபரப்பாகவும் பேசப்பட்டது.
"அந்த பேய் என்னை சாக கூப்பிடுதுப்பா.. போய்ட்டு வரேன்.." லெட்டர் எழுதி வைத்து தூக்கில் தொங்கிய மாணவி
இந்த போட்டோக்களை ஸ்நாப் சாட் மூலம் அந்த மாணவனுக்கு அனுப்பியதும் தெரியவந்தது.. இது குறித்து நடந்து வந்த விசாரணையில், தான் செய்த குற்றத்தை டீச்சர் ஒப்புக் கொண்டார். மேலும் இதை பற்றி அவர் சொல்லும்போது, "இதுக்கு முன்னாடி நான் இப்படி செய்தது இல்லை.. இதுதான் முதல் முறை.. இனியும் செய்ய மாட்டேன். செய்த தப்புக்கு வருத்தப்படறேன், இது சத்தியம்.
ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்த்தேன்.. விடாமுயற்சியுடன் வேலை செய்து வந்த நான் இப்போது அந்த வேலையையும் இழந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு 2 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த டீச்சர் விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.