பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்... நியூயார்க்கில் இந்தியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Recommended Video
நியூயார்க்: புல்வாமா தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
United States: Indians in New York protest outside the Pakistan Consulate against #Pulwama terrorist attack pic.twitter.com/4eQO9PSY1X
— ANI (@ANI) February 23, 2019
இந்தநிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று புல்வாமா தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
#WATCH Members of Indian community protested outside the Pakistan consulate in New York,US on 22 February, against #PulwamaTerrorAttack. pic.twitter.com/sXJCDA6jXF
— ANI (@ANI) February 23, 2019
தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்க கூடாது, தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.