சுலைமானி எங்கள் ஹீரோ.. அவரின் ரத்தம் தரையில் சிந்திவிட்டது.. பழிக்கு பழி வாங்குவோம்.. ஈரான் சபதம்!
அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.
Recommended Video
நியூயார்க்: அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் நேற்று டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தத்க்கது. இவர் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் அதிகாரம் மிக்கவராக திகழ்ந்தார். சிரியா போர் வர இவரும் ஒரு வகையில் காரணம்.
ஈரானுக்கு எதிராக போர் தொடுக்க பிளானா? திடீர் தாக்குதல் எதனால் நடந்தது? டிரம்ப் அதிரடி விளக்கம்!
ஈரான் அறிக்கை
இவரை பலமுறை இப்படி கொல்ல சதி நடந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த கொலை குறித்தும், அமெரிக்கா தாக்குதல் குறித்தும் ஈரான் முக்கிய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இது ஈரான் மீது நேரடியாக தொடுக்கப்பட்டு இருக்கும் தாக்குதல்.
அமெரிக்கா எப்படி
இதற்கு மிக மோசமான விளைவுகளை அமெரிக்கா சந்திக்க போகிறது. இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை. இதற்கு மிக கடுமையான பதிலடி கொடுப்போம். நாங்கள் பழிக்கு பழி வாங்குவது நிச்சயம்.
போர் தயார்
சுலைமானி எங்கள் நாட்டின் முக்கியமான தலைவர். அவரின் ரத்தம் தரையில் சிந்தியதை எங்களால் பொறுக்க முடியாது. அவர் எங்களின் ஹீரோ. இதற்கு தகுந்த பதிலடியை ஈரான் விரைவில் கொடுக்கும்.
போருக்கு தீவிரமாக தயாராகும் டிரம்ப்.. மிடில் ஈஸ்ட்டிற்கு கூடுதல் படைகளை அனுப்பிய அமெரிக்கா.. அச்சம்
பொருளாதார போர்
பொருளாதார ரீதியாக அமெரிக்கா எங்களை ஒடுக்கியது. தற்போது எங்கள் மீது டிரோன் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. அமெரிக்கா போருக்கு தயார் ஆகிவிட்டது இதன் மூலம் தெரிகிறது. ஈரானும் இதற்கு பதிலடி கொடுக்கும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார.