டிரம்ப் தயாராக இருக்கிறார்.. விரைவில் தன்னை யார் என்று நிரூபிப்பார்.. வெள்ளை மாளிகை பரபர அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய நேர்மையை செனட் சபையில் நிரூபித்து மக்கள் மத்தியில் தன்னுடைய புகழை மீட்பார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய நேர்மையை செனட் சபையில் நிரூபித்து மக்கள் மத்தியில் தன்னுடைய புகழை மீட்பார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பல நாட்களாக கண்ட கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கோரிய தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க அதிபருக்கு எதிராக வைக்கப்பட்ட அதிகார துஷ்பிரயோக புகார்கள் மீது அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை இன்று முக்கிய முடிவு எடுத்துள்ளது.இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 227 பேர் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு எதிராக 179 பேர் வாக்களித்தனர்.
டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் வெற்றி.. அடுத்து நடக்க போகும் அதிரடி திருப்பங்கள்!
வெள்ளை மாளிகை அறிக்கை
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அரசியல் வரலாற்றில் இது மிக மோசமான தினம். அமெரிக்காவில் ஆளும் கட்சியான குடியரசு கட்சி ஒரு வாக்கு கூட டிரம்பிற்கு எதிராக வாக்களிக்கவில்லை. அதேபோல் டிரம்பிற்கு எதிராக ஒரு புகாருக்கு கூட ஆதாரம் அளிக்கப்படவில்லை. ஆனாலும் ஜனநாயக கட்சி பதவி நீக்க தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியாயம்
டிரம்பிற்கு எதிரான விசாரணை நியாயமாக நடத்தப்படவில்லை. அவருக்கு எதிராக அரசு அதிகாரிகள், நாடாளுமன்றம், செய்தியாளர்கள் என்று எல்லோரும் செயல்பட்டு இருக்கிறார்கள்.அனைத்து விதமான விதிகளையும் புறந்தள்ளிவிட்டு அவர்கள் இதை செயல்படுத்தி உள்ளனர்.
அமெரிக்க மக்கள்
அமெரிக்க மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. இந்த விசாரணையில் பல முறைகேடுகள் நடந்தது. மக்களுக்கு இதன் உண்மை தெரியும். ஜனநாயக கட்சி 2020 அதிபர் தேர்தலில் இதனால் மோசமாக தோல்வி அடையும்.
அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய நியாயத்தை செனட் சபையில் நிரூபிப்பார். அவர் இந்த தீர்மானத்தை, விசாரணையை செனட் சபையில் முறியடிப்பார். அவர் தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறார். அவருக்கு நியாயம் கிடைக்கும் என்பதில் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார், என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.