நியூயார்க்கில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 16 பேர் காயம்.. 2 பேர் பலி
நியூயார்க்: விருந்து நிகழ்ச்சியில் சரமாரி துப்பாக்கிச் சூடு நடந்து, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நியூயார்க்கை அதிர வைத்துள்ளது.
16 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். 2 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் ஒருவர் ஆண் மற்றொருவர் பெண்.
அமெரிக்க நேரப்படி, சனிக்கிழமை அதிகாலை 12:30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. நகரின் வடகிழக்கில் ஒரு குடியிருப்பு பகுதியில் இந்த விருந்தும் அதையடுத்து துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது.
Heartbreaking. Friends and family just arrived at the north side of the scene. You can hear the anguish. #roc @DandC pic.twitter.com/WHEnI0peVE
— Will Cleveland (@WillCleveland13) September 19, 2020
"பென்சில்வேனியா அவென்யூவில் ஒரு பெரிய சூட்டிங் நடந்துள்ளது. அங்கு உயிரிழப்புகள் உள்ளன, "என்று போலீசார் சுருக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
யார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தோரின், உறவினர்கள், சம்பவ இடத்திற்கு அருகிலும் உள்ளூர் மருத்துவமனைகளிலும் கூடினர். குடும்ப உறுப்பினர்கள் அழுகை சத்தம் அங்கு பல இடங்களிலும் எதிரொலிக்கிறது.