இ-பாஸ் பெறாமல் கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல், சூரி மீது பாய்ந்தது வழக்கு
கொடைக்கானல்: இ-பாஸ் பெறாமல் கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல், சூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குள் சென்று நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் மீன் பிடித்த விவகாரத்தில் வேட்டை தடுப்பு காவலர்கள் இருவரும் சூழல் காவலர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் விமல் மற்றும் சூரி ஆகிய இருவருக்கும் அபாராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள் சூரி மற்றும் விமல் மீது , பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய, கோட்டாட்சியர் சிவக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதனுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியானது.
அத்துடன் இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு நடிகர்கள் விமல், சூரி பயணம் செய்தது உறுதியானது. உள்ளூர் பிரமுகரின் வாகனத்தில் இருவரும் சுற்றுலா சென்றது விசாரணையில் அம்பலமாகியது.
ஒரு மாஸ்க் ரூ.6.45க்கு கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் இலவசமாக கொடுக்கிறோம் - ஆர்.பி உதயகுமார்
இதையடுத்து இ-பாஸ் பெறாமல் கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல், சூரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஊரடங்கை மீறியது, தொற்று பரவ காரணமாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.