கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு
குன்னூர்: கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு அளித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் உள்ளன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
தமிழகத்தில் சிஸ்டம் கெட்டு போய்விட்டது.. ரஜினி போல் கூறிய கமல்ஹாசன்
சிகிச்சை
அப்போது அவர் கூறுகையில் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் தவிர்த்துவிட்டார் ஸ்டாலின். சுயநலத்துக்காக கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தார்.
விசாரணை
கருணாநிதியை வீட்டில் அடைத்து வைத்து திமுக தலைவராக பொறுப்பேற்றார் ஸ்டாலின். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.
கடும் விமர்சனம்
கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக இனி ஸ்டாலின் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. அண்மைக்காலமாக ஸ்டாலின் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.
காது சவ்வு கிழிந்துவிடும்
திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒட்டன்சத்திரம் பகுதியில் வாக்குச் சேகரித்தார். அப்போது மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும். பதிலுக்கு நாங்கள் பேசினால் காது சவ்வு கிழிந்துவிடும் என ஒருமையில் பேசினார்.