நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ஜில் ஜில் ஜிகா ஜிகாதான்.. அடிக்குது குளிரு.. ஊட்டியை நனைக்கும் பனி.. நடுங்கும் மக்கள்!

நீலகிரி மாவட்டத்தில் மக்களை பனிப்பொழிவுடன் குளிர் வாட்டி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊட்டி மக்கள் கடும் குளிரால் அவதி-வீடியோ

    ஊட்டி: ஊட்டி முழுவதுமே ஒரே ஜில் ஜில் ஜிகாஜிகாதான்.. பொழிந்து வரும் பனியை கண்டு நடுங்கி வருகிறார்கள் பொதுமக்கள்!

    கடந்த ஒரு மாதமாகவே ஊட்டியில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. காலையில் 8 மணி ஆனால் கூட வெளியில் யாரும் வருவதில்லை.

    அப்படியே வெளியே வந்தாலும் எதிரே வரும் வண்டிகள் கூட கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனி கொட்டி வருகிறது. காலையில் ஆரம்பித்து இரவு வரை நாளெல்லாம் வண்டிகளில் லைட் போட்டு கொண்டு போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    இலைகள், செடிகள்

    இலைகள், செடிகள்

    கருப்பு நிற தார் ரோடுகள் முழுவதும் வெண்பனியால் நிறைந்து கிடக்கிறது. பசுமை இலைகளும், செடிகளும்கூட கருகி காய்ந்து போய் உள்ளன. இப்படிதான் வேலூர் மாவட்டத்திலும் பனிப்பொழிவு இருக்கிறது. மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. அதேபோல, மாலை 5 மணிக்கு பனிப்பொழிவு இன்னும் அதிகமாகி விடுகிறது.

    குளிர் காய்கிறார்கள்

    குளிர் காய்கிறார்கள்

    முடங்கி கிடக்கும் பொதுமக்கள் சூரியன் எப்போ வரும் காத்திருந்த பிறகே காலையில் வெளியே வருகிறார்கள். பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேலூர் மக்கள் நடுரோடுகள், நடுத்தெருக்கள், மற்றும் தங்கள் வீட்டுக்கு முன்னாடியே பழைய பொருட்களை கொளுத்திவிட்டு குளிர் காய்கிறார்கள்.

    கண்ணாடி போல நீர்

    கண்ணாடி போல நீர்

    கொடைக்கானல் முழுவதுமே மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வருகிறார்கள் என்றால் அங்குள்ள ஏரிகளில் உறைந்து கிடக்கும் தண்ணீரும் இயல்பு நிலைக்கு வரவில்லை. அப்படியே ஆடாமல் அசையாமல் கண்ணாடி போல உறைந்து உள்ளது.

    சென்னைவாசிகள்

    சென்னைவாசிகள்

    இதை தவிர மதுரை, சென்னை போன்ற அனல் கொளுத்தும் மாவட்டங்களிலும் மக்கள் குளிரை அனுபவித்து வருகிறார்கள். சாயங்காலம் ஆனாலே ஸ்வெட்டர்களை போட்டுக் கொள்ளும் நிலைமை சென்னைவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

    கால்நடைகள்

    கால்நடைகள்

    ஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதுமே ஜில்லென்ற குளிர் காற்று வீசி வருவதுடன், பனிப்பொழிவை சாரல்போல கொட்டி வருகிறது. மனிதர்களே கதி கலங்கி போகிறார்கள் என்றால், விலங்குகள், கால்நடைகளின் நிலைமையோ இன்னும் பரிதாபம்.

    சந்தடி சாக்கு

    சந்தடி சாக்கு

    மாநிலம் முழுவதும் பனிப்பொழிவு சிறு தூரல் போல கொட்டி வருவதால் ஸ்வெட்டர்கள், சால்வைகளின் விற்பனை சந்தடி சாக்கில் சூடு பிடித்து வருவதுடன், குளிருக்கு டீக்கடைக்கடைகளை நோக்கி பெரும்பாலானோர் படையெடுத்து வருகின்றனர்.

    English summary
    Vellore, Kodaikanal, and Nilgiri District shiver as Temperature dips and Normal Life affects due to heavy snowfall
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X