வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே காட்டெருமை கூட்டம்.. குன்னூரில் பரபரப்பு!
Recommended Video
குன்னூர்: குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகே காட்டெருமை புகுந்ததால், அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில், வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், வாக்கு எண்ணும் மையம் அருகே 10 க்கும் மேற்பட்ட காட்டெருமை கூட்டம் திடீரென புகுந்தது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே காத்திருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பிப்ரவரி முதல் கமல்ஹாசன் மக்கள் சந்திப்பு... கிராமங்கள் வாரியாக பயண ரூட் ரெடி
இதனை தொடர்ந்து வனத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.