கம்பியை அறுத்து ஓடிய புலி.. 2 மணி நேரம் பஸ்சை மறித்த யானை.. நீலகிரியை உறைய வைத்த டாப் வீடியோக்கள்
ஊட்டி: குளிர் வாசஸ்தலமான ஊட்டியை இந்த வருடம், குலுங்க வைத்த டாப் வீடியோக்களை ஒரு ரவுண்ட் பார்க்கலாம் வாங்க.
Recommended Video
நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித அந்தோணியார் பள்ளியில் வாக்கு எண்ணும் பணிகளின்போது 10க்கும் மேற்பட்ட காட்டெருமை கூட்டம் திடீரென புகுந்தது. காத்திருந்த கட்சித் தொண்டர்கள், அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ அப்போது பரபரப்பை கிளப்பியது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே அரசு பஸ்சை காட்டு யானை வழி மறித்து 2 மணி நேரம் போக்கு காட்டிய வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பதைபதைப்போடு பஸ்சுக்குள் இருந்த பயணிகள் ஓரு கட்டத்தில் பஸ்சிலிருந்தபடி இதை வீடியோவாக எடுத்தனர். 2 மணி நேரம் அங்கேயே நின்று விளையாட்டு காட்டிய காட்டு யானை பிறகுதான் நகர்ந்து காட்டுக்குள் சென்றது.
நீலகிரி, கோத்தகிரி அருகே சுறுக்கு கம்பியில் புலி ஒன்றின் கால் சிக்கியது. எனவே, அதனால், ஓட முடியவில்லை. இதையறிந்ததும், கோவை கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் ஒரு குழு அங்கு வந்தது. ஆனால், திடீரென சுறுக்கு கம்பியை அறுத்துக் கொண்டு காட்டுக்குள் புலி தப்பியோடியது. இதை எதிர்பார்க்காத வனத்துறையினர் மரத்தில் ஏறியும், கல்லை புலியை நோக்கி வீசியும் உயிரை காப்பாற்றினர். ஆனால் ஓடிய புலியை கண்டுபிடிக்க முடியவில்லை.