நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யானையை உயிரோடு எரித்த.. 2 குரூரர்கள்.. தட்டி தூக்கியது போலீஸ்.. மசினகுடியில்..!

மசினகுடியில் யானையை தீ வைத்து எரித்த 2 பேர் கைதாகி உள்ளனர்

Google Oneindia Tamil News

நீலகிரி: யானைக்கு உயிரோடு நெருப்பு வைத்த, குரூரர்கள் 2 பேரை மசினகுடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. தலைமறைவாகி உள்ள இன்னொருவரை தேடி வருகின்றனர்.

Recommended Video

    நீலகிரி: யானையை தீ வைத்து கொளுத்திய கொடூரர்கள்... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

    நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 40 வயது மதிக்கத்தக்க ஒரு யானை சுற்றி சுற்றி வந்தது.. பிறகுதான் அதன் முதுகில் காயம் இருந்தது தெரியவரவும், வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை தந்தனர்.. உடல்நிலையும் கொஞ்சம் கொஞ்சமாக தேறி மசினகுடி மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடியது.

     Nilgiri Elephant died and two arrested

    இதனால் பொது மக்களுக்கு, ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் யானையை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்க 3 நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் முடிவு செய்தனர்.. அதன்படி, முதுமலை கால்நடை டாக்டர்கள் யானைக்கு மயக்க மருந்தும் செலுத்தினர்.. யானை லேசாக மயக்கம் அடைந்தவுடன் கும்கி யானைகள் அதனருகே வந்தது.அப்போது அந்த காட்டு யானை, தனது தும்பிக்கையை நீட்டி கொஞ்சியது.

    ஆனால், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் திடீரென கீழே விழுந்துவிட்டது.. இதனால் பதறிபோன வனத்துறையினர் சிகிச்சை தந்தும் யானையை காப்பாற்ற முடியவில்லை.. இதன்பிறகுதான் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டபோது, காதின் ஒரு பகுதி சிதைந்து ரத்தம் வழிந்தோடியுள்ளது... காதில் யாரோ நெருப்பை வைத்து எரித்துள்ளனர் என்று டாக்டர்கள் சொன்னார்கள்.

    இந்நிலையில், இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் யார் என்று போலீசார் தேடி வந்தநிலையில், இறந்த யானை மீது எரியும் டயர் வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இது சம்பந்தமான சிசிடிவியும் வெளியாகி உள்ளது.. ஒரு தனியார் ரிசார்ட்டுக்கு அந்த யானை வந்துள்ளது.. அப்போது அதன்மீது எரியும் டூவீலரின் டயர்களை அந்த ரிசார்ட் ஊழியர்கள் வீசியுள்ளனர்.

    திடீரென அலறிய யானை.. காதுக்குள் ஆசிட் ஊற்றி.. தீ மூட்டி.. மிரண்டு போன டாக்டர்கள்.. உறைந்து போன ஊட்டிதிடீரென அலறிய யானை.. காதுக்குள் ஆசிட் ஊற்றி.. தீ மூட்டி.. மிரண்டு போன டாக்டர்கள்.. உறைந்து போன ஊட்டி

    நெருப்பு டயர் யானையின் தலை, காது பகுதியில் பற்றி கொண்டு எரிந்தது.. யானை வலி பொறுக்க முடியாமல் பிளிறி கொண்டே தவித்து ஓடுகிறது.. இந்த சிசிடிவி வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து யானை மீது எரியும் டயரை வீசிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இதில் இன்னொருவர் சம்பந்தப்பட்டுள்ளாராம்.. அவர் தலைமறைவாகி விடவும் போலீசார் தேடி வருகிறார்கள்.. கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இதனிடையே யானையை தீ வைத்து எரித்த சொகுசு விடுதிக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிமம் இல்லாமல் அந்த விடுதி நடத்தப்பட்டு வந்தது இப்போது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதேபோல் மசினகுடி பகுதியில் இயங்கி வரும் மற்ற விடுதிகளிலும் முறையான ஆவணங்கள், உரிமம் உள்ளனவா என ஆய்வு செய்யப்படுகிறது.

    English summary
    Nilgiri Elephant died and two arrested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X