நீலகிரி தொகுதியை எம்பி கோபாலகிருஷ்ணன் தக்க வைத்து கொள்வாரா?
நீலகிரி தொகுதியை எம்பி கோபாலகிருஷ்ணன் தக்க வைப்பாரா?
Recommended Video
சென்னை: சில எம்பி.க்கள் செயல் திட்டங்களை செய்து ஃபேமஸ் ஆவார்கள் என்றால் மாவட்டத்துக்கு எதுவுமே செய்யாமல் ஃபேமஸ் ஆனவர்தான் கோபாலகிருஷ்ணன். நீலகிரி அதிமுக எம்பிதான் கோபாலகிருஷ்ணன். நீலகிரி ஒரு தனித் தொகுதியாகும்.
கோபாலகிருஷ்ணன் இதற்கு முன் குன்னூர் நகராட்சி தலைவராக இருந்தவர். 56 வயதாகிறது. எம்ஏ., எம்ஃபில் படித்தவர். கடந்த 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஜெயிச்சதோடு சரி, தொகுதி பக்கம் இவர் வந்து 4 வருஷமாகிவிட்டது.
எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை, எந்த மக்கள் பிரச்சனையையும் இதுவரை கண்டு கொண்டதே இல்லை. இப்படி ஒரு எம்.பி., இருப்பது கூட மாவட்ட மக்களுக்கு சரிவர தெரியாது. இவர் தொகுதி பக்கம் எட்டிகூட பார்க்காததால், இவர் போட்டோவை போட்டு, "காணவில்லை" என்று போஸ்டர் கூட ஒட்டப்பட்டு அதுபெரிய சர்ச்சை கூட ஆனது.
வைரல் பேச்சு
அது மட்டும் இல்லை, இவர், தன் கட்சிக்காரர்களையே ஒருமையில் வசைபாடி, அசிங்க அசிங்கமாக திட்டியதுகூட வைரலானது. இதுவரை மாவட்ட வளர்ச்சிக்கு எதுவும் செய்யாவிட்டாலும், தற்போதுவரை இவர் குன்னூருக்கும் டெல்லிக்கும் பறந்தபடியேதான் இருப்பார்.
ஆ.ராசா
இத்தனைக்கும் இவர் 35 நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 73 சதவீதம் பாராளுமன்றத்தில் வருகை வைத்துள்ளார். இந்த தொகுதியில் இவர் யாரை எதிர்த்து இங்கு போட்டியிட்டார் தெரியுமா? திமுகவின் ஆ.ராசாவை எதிர்த்துதான்.
வாக்கு வித்தியாசம்
2014 நிலவரப்படி நீலகிரி லோக்சபா தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 12,69,163 ஆகும். இதில் 74 சதவீத வாக்குகளை பெற்றவர் கோபாலகிருஷ்ணன். இவருக்கு கிடைத்த வாக்குகள் 9,33,076 வாக்குகள். ஆ. ராசா 3,58,760 ஓட்டுகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். ஆ.ராசாவைவிட 1,04,940 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றார் கோபாலகிருஷ்ணன்.
பலவீனமான சூழல்
எம்பி ஆனதில் இருந்தே நீலகிரி மாவட்டத்தில் நிறைய அதிருப்தியை இவர் சம்பாதித்துவிட்டதால், வரப்போகிற தேர்தலில் இவரே வெற்றி பெறுவாரா? அல்லது திமுகவுக்கே அது சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பெரிய அளவில் தொகுதிக்கு எதுவும் செய்யாத நிலையில் தற்போது அதிமுகவும் பலவீனமாக இருக்கும் சூழலில்.. இங்கு யாரை நிறுத்தினாலும் அதிமுகவுக்கு நிச்சயம் மூச்சுத் திணறும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள்.