நீலகிரி மலைப்பகுதியில் தலை குப்புற கவிழ்ந்த ஓபிஎஸ் பிரச்சார வாகனம்.. பெரும் பரபரப்பு
Recommended Video
ஊட்டி: கூடலூர் அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சார வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் மூத்த தலைவர்கள் பிரச்சாரம் செய்யப்போகும் தொகுதியில் அவர்களுக்காக சிறப்பு வாகனங்களை முன்கூட்டியே கொண்டு செல்வது வழக்கம்.
இன்று நீலகிரி மாவட்டத்தில், அந்த லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்றிருந்தார்.
ஜெ.,வின் ஆன்மாவிற்கு பயந்து.. நலத்திட்டங்களை கூடுதலாக செய்கிறோம்... ஓபிஎஸ் பேச்சு
ஊட்டி சென்ற வண்டி
இதையொட்டி, சென்னையிலிருந்து, ஊட்டிக்கு நேற்று இரவு 9 மணிக்கு சிறப்பு பிரச்சார வாகனம் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. அங்கு பராமரிப்பு பணிகளை முடித்துக் கொண்டு, இன்று காலை கூடலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊட்டியிலிருந்து, கூடலூர் செல்லும் பாதை மிகவும் சரிவான பகுதியாகும்.
இருவர்
வாகனத்தை ஓட்டுநர் இயக்கிய நிலையில், உடன் ஒரு உதவியாளர் இருந்துள்ளார். இந்த பிரச்சார வாகனம், ஊட்டி- கூடலூர் நடுவே, நடுவட்டம் என்ற பகுதியில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது, தலைகுப்புற கவிழ்ந்தது.
உங்களுக்கு அரசியல் தெரியுமா? அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க.. பாஸ் பண்ணிட்டா கெத்துதான்!
பள்ளத்தில் விழவில்லை
இந்த விபத்தில், டிரைவர் மற்றும் உதவியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது. நல்லவேளையாக, சாலையிலேயே வாகனம் கவிழ்ந்தது. மலைப்பாதை என்பதால் சற்று தள்ளி வாகனம் கவிழ்ந்திருந்தால், பள்ளத்தில் வாகனம் உருண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
அப்செட்டில் ஓபிஎஸ்
முன்னதாக கூடலூரில் ஓபிஎஸ் வருகை தந்து பிரச்சார வாகனத்திற்காக காத்திருந்தார். அவருக்கு இந்த தகவல் சொல்லப்பட்டது. இதனால் அவர் அப்செட் ஆனார். இதன்பிறகு, வேறு வாகனம் கொண்டு செல்லப்பட்டு, ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தார்.
ஜெயலலிதாவின் 2வது வீடு
இந்த விபத்துக்கு என்ன காரணம் என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சென்டிமென்ட்டாக இந்த விபத்தை, அப்செட்டாக பார்க்கிறார்கள் அதிமுகவினர். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் அவரது படம் பதித்த வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது சரியாக தெரியவில்லை என அதிமுகவினர் கையை பிசைகிறார்கள்.