நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உடம்பில் துணி கூட இல்லை.. தொப்புள் கொடி ஈரமும் காயல.. ஊட்டி குளிரில் கோயில் வாசலில் சிசு.. !

Google Oneindia Tamil News

ஊட்டி: உடம்பில் துணி கூட போர்த்தவில்லை.. ஊட்டி குளிரில் பச்சிளம் குழந்தையை யாரோ கோயில் வாசல் முன்பு போட்டுவிட்டு போயுள்ளனர்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஊட்டி கொல்லிமலை கிராமத்தில் உள்ளது காந்திபுதூர்... இங்குள்ள மதுரைவீரன் கோயில் முன்பு திடீரென ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.

 rescued boy baby in front of temple near ooty

அதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோதுதான், பிறந்த சில நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்தது... அந்த குழந்தைக்கு துணி கூட சுற்றவில்லை.. வெறும் உடம்பில் சுற்றி கோயில் வாசலில் யாரோ போட்டுவிட்டு சென்றுள்ளனர்.. அதனால் பொதுமக்கள் இது குறித்து கொலக்கொம்பை போலீசுக்கு தகவல் சொல்லவும், போலீசாரும் விரைந்து வந்தனர்.

உடனடியாக குழந்தைக்கு கம்பளி ஒன்று போர்த்தினர்.. சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... அங்கு குழந்தையை டாக்டர்கள் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.. குழந்தை இப்போது நன்றாக இருக்கிறது. குழந்தை பிறந்து 10 நாள் ஆகியிருக்கும் என்கிறார்கள்..

டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க ஆதார் தேவையில்லை.. விதிகளை தளர்த்தியது உச்ச நீதிமன்றம்டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க ஆதார் தேவையில்லை.. விதிகளை தளர்த்தியது உச்ச நீதிமன்றம்

இக்குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை.. வளர்க்க முடியாமல் இப்படி போட்டுவிட்டு போனார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் விசாரணை நடந்து வருகிறது.. இந்த தகவல் அறிந்து குழந்தை பாதுகாப்பு நல அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

அதேபோல யாருக்கெல்லாம் சமீபத்தில் பிரசவம் ஆனது என்பது குறித்தும் கேட்டறிந்து வருகின்றனர்... ஊட்டி குளிரில் கோயில் வாசலில் ஆண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
rescued boy baby in front of temple near ooty and treatment is going on
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X