கனமழை.. நீலகிரி பந்தலூர் தாலுகா.. தேவாலாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
உதகை: தொடர் கனமழையால் நீலகிரியில் ந்தலூர் தாலுகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இதனிடையே நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பந்தலூர் தாலுகா மற்றும் தேவாலாவில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்றும் பல்வேறு மாவடங்களில் விட்டு விட்டு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் அவதிஅடைந்துள்ளனர்.
Comments
English summary
heavy rain: schools Holidays in some places of Nilgiris tomorrow
Story first published: Thursday, October 31, 2019, 20:39 [IST]