என்னை தாண்டி போய்டுவீங்களா.. பஸ்சை வழிமறித்த யானை.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த பயணிகள்!
Recommended Video
நீலகிரி: நீலகிாி மாவட்டம் மஞ்சூா் அருகே அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானையால், 2 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்திற்கு உள்ளேயே பயணிகள் சிக்கி தவித்தனர். மேலும் வாகனங்களை கவனமுடன் இயக்க வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினா் எச்சாிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிாி மாவட்டம் மஞ்சூாிலிருந்து கோவைக்கு செல்லும் மலைபாதையில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து வருகின்றன.
இந்நிலையில் கோவையிலிருந்து மஞ்சூருக்கு சென்ற அரசுப்பேருந்தை பெரும்பள்ளம் என்ற இடத்தில் காட்டுயானை ஒன்று சாலையை மறித்தபடி நின்று கொண்டிருந்தது. யானையை கண்டவுடன் ஒட்டுநா், பேருந்தை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினாா்.
இதேபோல் மஞ்சூாிலிருந்து கோவைக்கு சென்ற வாகனங்களும் காட்டு யானை சாலையில் நின்றதால், வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தினா். சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் நடுவே நின்றிருந்தது.
இதனால் பேருந்திற்கு உள்ளேயே பயணிகள் சிக்கி தவித்தனர். பஸ்சுக்குள் இருந்தபடியே யானையை வீடியோ எடுப்பதும், அது எப்படா இடத்தைக் காலிச் செய்யும் என்றும் பயணிகள் காத்துக் கிடந்தனர். நீண்ட நேர விளையாட்டுக்குப் பின்னா் யானை மெதுவாக நடந்துசென்று காட்டுப் பகுதிக்குள் போனது. அதன் பிறகே வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.
தற்போது காட்டுயானைகள் அதிகளவில் வனப்பகுதியை விட்டு சாலைகளில் வருவதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்றும், யாரும் வாகனங்களைவிட்டு கீழே இறங்கி புகைப்படம் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம் என வனத்துறையினா் எச்சாிக்கை விடுத்துள்ளனா்.