வெலவெலத்த ஊட்டி.. 5 வயது குழந்தையுடன் போட் ஹவுஸ் ஏரியில் குதித்து இளம்தாய் தற்கொலை!
ஊட்டி ஏரியில் இளம்தாய் 5 வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டார்
ஊட்டி: என்ன காரணம் என்று தெரியவில்லை.. 24 வயது இளம்தாய், 5 வயது மகளுடன் ஊட்டி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரியில் சுற்றுலா பயணிகள் மத்தியில் ரொம்பவும் பிரபலமானது ஊட்டி படகு இல்லம் ஏரி. மற்ற இடங்களை விட, இங்குள்ள போட் ஹவுஸ்-ல் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நிலையில், இன்று காலை ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள். அதன்படி விரைந்து சென்று பார்த்ததில், இளம்பெண் ஒருவர், தனது குழந்தையுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர். பெயர் நிர்மலா. 24 வயதான இவர் ஒரு இளம் விதவை. கணவர் இறந்து 2 வருடம்தான் ஆகிறது. கடந்த 2 நாட்களாக நிர்மலாவை காணவில்லை என்று ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஸ்கூல் பாத்ரூமில்.. ஜெயந்தியுடன்.. ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்.. பரபர வீடியோ
இந்நிலையில், தனது 5 வயது குழந்தையுடன் நிர்மலா ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எதற்காக இந்த தற்கொலை என்று உடனடியாக தெரியவில்லை.
எனினும் 2 சடலங்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள். குழந்தையுடன் தாய் ஏரியில் குதித்து இறந்த தகவல் அறிந்ததும், சுற்றுவட்டார மக்கள் படகு இல்லத்தில் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.